என்பா 1
முள்ளும், மலருமாய் தழைக்கும் ரோஜாச்செடி
மேடும், பள்ளமுமாய் பயணிக்கும் பாதை
நீயும், நானுமாய் இணைந்திடும் பொழுது
முடிவுறா வாழ்க்கை படிப்பினை
என்பா 2
தொடர்ந்து கேட்கிறது குயிலின் கூவல்
மனதினுள் ஊடாடுகிறது மோனலிசா ஓவியம்
தேடலில் கிடைக்காத ஏதோ ஒன்று
கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை.
அன்புச்செல்வி சுப்புராஜூ
தேடலினால் கிடைக்காத ஒன்று வலி.குயிலின் சத்தம் இதம்.