ரபியா அல்-பஸ்ரி கவிதை

தமிழில் : க.மோகனரங்கன்

நான்
ஒரு கையில்
தீபந்தத்தையும்
மற்றொரு கையில்
வாளி நிறைய நீரையும்
சுமந்து வருகிறேன்
இவற்றைக் கொண்டு,
பரலோகத்தை
பற்ற வைப்பதோடு
நரகத்தின் தீப்பிழம்புகளை
நனைத்து
அணைக்கவும் போகிறேன்.
இதனால்
இறைவனை நோக்கிப் பயணிப்பவர்கள்
யாவரும்,
தமது முகத்திரைகளை
கிழித்து எறிவதுடன்
அடையவேண்டிய
அசலான இலக்கை
அறியவும் செய்வார்கள்!