கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்ச்சி 8 ல்அழகியசிங்கர் வாசித்த கவிதைகள்

1. 

நான் சும்மா இருந்தேன்

சும்மா இருக்கப் பழகத்

தெரியாதவன் என்றார்கள்

2.

வாளியில் தண்ணீர்

பிடித்துக்கொண்டு 

வந்தாள்.

இன்னொரு பக்கம்

ஓட்டை.

வழிந்துகொண்டு வந்தது

3.

இன்று கவிதை 

வாசிக்க வாங்க

என்றான்

கவிதைகள் சப்தமிட்டபடி

இருந்தன

யாரும் கவிதைகள்

வாசிக்க வரவில்லை

4.

ஈரத்துண்டால்

முகத்தைத் துடைத்துக்

கொண்டான்

அழுக்குப் போகவில்லை

துண்டில்

ஈரமும் போகவில்லை

5.

அவனுக்கு  நிஜமாகக்

கோபம்

வந்து கொண்டிருந்ததுஅவன்மேல்தான்

6.

என் கண்முன்னே 

எல்லாம்

நடந்துகொண்டுதான்

இருக்கிறது

ஆனால் எதையும்

என்னால் தடுக்க முடியவில்லை