இலக்கியராஜா கவிதை

காலி அறை
சுமக்கும் நினைவுகள்

அது வெற்று அறை
நிரம்பித் ததும்பும்
நினைவுகள் நிறைந்தது.

எத்தனை முறை
அது வெறுமையாகித்
தவித்தது தெரியாது.

இந்த இடத்தில்
மேஜை இருந்தது.

எத்தனை கவிதைகளை
அதன்மேல் வைத்து
எழுதி எழுதிக் கிழித்திருப்பேன்.

எத்தனை முறை
தேநீர் அருந்திவிட்டு
வெற்றுக் கோப்பையை
அதன் மேல் வைத்திருப்பேன்.

தெரியாமல் ஒருமுறை
கைபட்டு கீழே விழுந்து சிதறிய
அந்தப் பீங்கான் கோப்பையை
ஒட்டிக் கொண்டிருக்கிறேன்
சிதறாத நினைவுகளுடன்…

அந்த மேஜை
வேரிடத்தில்
வேறொரு அறையில்…