துரிதக் கவிதைகள்/அழகியசிங்கர்

  1. மடியில்
    உட்கார்ந்து
    கொண்டிருந்த
    பேரனின்
    சுமையைத்
    தாங்க முடியவில்லை
  2. நியாயமா?
    என்று கேட்டேன்
    நியாயமில்லை
    என்று சொன்னவன்
    என்னை நிமிர்ந்து பார்த்தான்
  3. எல்லோரும் கவிதை
    எழுதுகிறார்கள்
    ஆம்.
    எல்லோரும் கவிதை
    வாசிக்கிறார்களா
  4. சாப்பிட
    உட்கார்ந்தேன்
    இலையில்
    விழுந்தவை
    என்னிடம்
    பேச ஆரம்பித்தன
  5. ஒரு
    நீண்ட தெருவில்
    நடந்து
    கொண்டிருந்தேன்
  6. கல்யாண மண்டபத்தின்
    முன்
    செருப்புகளின்
    குவியல்
  7. ஜன்னலைத்
    திறந்தேன்
    காற்று விர்ரென்று
    அடித்தது