ஐந்து கவிதைகள்/ந.பானுமதி

மெல்ல மறைந்தது நிலவு
எழும்பிய அலைகள் சுருண்டன
வைகறை வெளிச்சம்

***

நானே அழைத்தேன் நானே
திரும்பினேன் நானே
புறக்கணித்தேன்

***

அந்தரங்கப் பூக்களின் காடு
தேனீக்களின் ரீங்காரம்
இளவேனில் வசந்தம்

***

காற்றில் கேட்டதொரு கவிதை
அது சொல்லா இசையா
கவிதையே சொல்லட்டும்

***

வெளியில் இரண்டு அல்லது அதற்கும் மேலே
உள்ளே அனைத்தும் சமமாக உள்ளே
பூப்பல்லாக்கில் ஊர் கோலம்

***