மெல்ல மறைந்தது நிலவு
எழும்பிய அலைகள் சுருண்டன
வைகறை வெளிச்சம்
***
நானே அழைத்தேன் நானே
திரும்பினேன் நானே
புறக்கணித்தேன்
***
அந்தரங்கப் பூக்களின் காடு
தேனீக்களின் ரீங்காரம்
இளவேனில் வசந்தம்
***
காற்றில் கேட்டதொரு கவிதை
அது சொல்லா இசையா
கவிதையே சொல்லட்டும்
***
வெளியில் இரண்டு அல்லது அதற்கும் மேலே
உள்ளே அனைத்தும் சமமாக உள்ளே
பூப்பல்லாக்கில் ஊர் கோலம்
***