எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி…/எம்.டி. முத்துக்குமாரசாமி

எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சுற்றுப்புற வீடுகளிலும் வேலை செய்கிறார்.அவர் இன்று சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு வீட்டில் மகனும் மருமகளும் அவரின் வயதான தாயாரை மூன்று வருடங்களுக்கும் மேலாக ஒரு அறையில் வைத்திருக்கிறார்களாம் அவரின் மேல் சூரிய வெளிச்சமே படவில்லையாம். இன்னொரு வீட்டில் உள்ள வயதானவருக்கு முதியவர் பென்ஷன் வருகிறதாம். பென்ஷன் வந்த மூன்று நான்கு நாட்களுக்கு அவருக்கு நல்ல உணவளிப்பார்களாம். அதன் பின்னர் அவர் மாதம் முழுக்க அரை வயிறும் கால் வயிறும் பட்டினியாயும் இருப்பாராம். இன்னொரு வீட்டில் ஒரு முதிய தம்பதி கீழே விழுந்து மூன்று மாதத்திற்கும் மேலாய் படுத்த படுக்கையாய் கிடந்தார்களாம். நான்கு தெரு தள்ளி இருக்கும் மகனும் மரும்களும் அவர்களை எட்டிப்பார்க்கவில்லையாம்.

தமிழ் நாட்டில் சிவில் சமூகம்தான் இல்லை என்று நினைத்திருந்தேன்; நம் சமூகம் முதியவர்களைக் கொடுமைக்குள்ளாக்கும் சமூகமாகவும் இருக்கிறது போல.