
ஒருவர் இறந்துபோனால்
மீதமுள்ள உலகம் அப்படியே இருக்கிறது
ஒருமாற்றமும் இல்லை
மீதமுள்ள உலகம் அவருக்கு
அணைந்து போனது தவிர்த்து
ஒருமாற்றமும் இல்லை
மீதமுள்ள உலகம்
அப்படியேதான் இருக்கும்
என்பதை
கொஞ்சம் முன்னதாக
அவர் தெரிந்திருந்தால்
மீதமுள்ள உலகத்தில்
அவர் நீடித்திருக்கவும் கூடும்
இன்னும் சிறிது நாட்கள்
மாதங்கள்
ஆண்டுகள்
மொத்தத்தில்
மீதமுள்ள உலகத்தில்
இருப்பவர் நாம் இல்லையா
பல்லியின் வால் போல
இழந்த உலகின் ஒருபகுதிதான்
இந்த மீதமுள்ள உலகம் இல்லையா
