காலம்/ஷண்முக சுப்பையா

இந்த உலகில்.
இருப்பவரில்
இருப்போர்
ஒரு சிலரே
இருப்பார் போல்
நடிப்போரே
பெரும்பாலோர்
இவருடனே
இறந்தோரும்
இறந்தார் போல்
இருப்பாரும்
இல்லாமில்லை
இவருள்ளே
இறந்த பின்னும்
இருந்திடுவார்
யாரென்று.
காலமென்னும்
கள்வன்தான்
கண்டறிவான்.