ரூமி கவிதை

தமிழில் : க.மோகனரங்கன்

உலகம் முழுவதற்கும்
உறவாக நீ இருப்பினும்,
என் இதயத்தினுள்ளாக
உனது இருப்பை
என்னால் உணர முடிகிறது.
உன்னிடமிருந்து
ஒரு சைகைக்காக,
ஒரு பார்வைக்காக,
ஆவலுடன் அமைதியாக
நான் காத்திருக்கிறேன்.