சிறுகதை” பற்றி என்னிடத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் – சுஜாதா

முகநூலில் : ராம் ஸ்ரீதர்

  1. சிறுகதை என்பது என்ன? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா?
    எனக்குத் தெரிந்த வரை ஒரே ஒரு விதிதான் அதற்கு சிறிதாக உரைநடையில் விவரிக்கப் பட்டகதை. A short fictional narrative in prose. வேறு எந்த வரையறைக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது
  2. இதில் நல்ல சிறுகதை என்பது?
    நல்ல சிறுகதை என்பது சிறிதாக சிறப்பாக உரைநடையில் விவரிக்க கதை
    3 ‘சிறப்பாக’ என்கிற வார்த்தை அவசியமா?
    அப்படித்தான் நான் நினைக்கிறேன். கதை சிறப்பாக இல்லையென்றா அதை மறப்பார்கள். ஒரு கதை ஜீவித்திருக்க அது சிறப்பாக சொல்ல பட்டிருக்க வேண்டும்
    4 சிறுகதையின் அளவு என்ன ? வார்ததைகளின் எண்ணிக்கையை வை கணக்கிடுவார்களா?
    சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்கைளுக்குள் சொல்லப் படவேண்டும் என்று குத்து மதிப்பாக சொல்லலாம்
  3. இந்த அளவு வரையறை எதற்கு?
    இதை ஒரு வழிகாட்டியாகத்தான் சொல்லவேண்டும நூறு பக்கங்கள் இருந்தால் அதை எனக்கு சிறுகதை என்று ஒப்புக்கொள்ள தயக்கமாக இருக்கிறது. அதே போல் ஒருபக்கத்தில் இருந்தால் அது கதையல்ல கதைச்சுருக்கம்.. நான்கு வரிகளுக்குக் கீழ் என்றால் கவிதையாகச் சொல்லிவிடலாம்.
  4. அளவு வரையறை தேவைதானா?
    தேவையில்லை என்று நவீன விமர்சகர்கள் சொல்கிறார்கள். உதாரணமா ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘ யூலிஸிஸ் (Ulysses) – 768 பக்கங்கள் ! ஒரு சிறுகதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். புதிதாக எழுதுபவர்கள் இந்த அளவு வரையறையைக் கடைப் பிடிப்பது நல்லது
  5. சிறுகதைக்கு கதை தேவையா?
    நல்ல கேள்வி. கதை தேவையா என்பதையும் இப்போது சந்தேகிக்கிறார்கள் ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘A Hanging’ என்னும் கட்டுரையை சிறுகதையாக பார்க்கிறவர்களும் உண்டு
    (என்னிடம் இந்தக் கட்டுரை- A Hanging – உள்ளது. அதன் தமிழ் வடிவத்தை விரைவில் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்) – Ram Sridhar
  6. சிறுகதை எதைப் பற்றி இருக்கலாம்?
    யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் இருக்கலாம்.
  7. காலம்?
    நுற்றாண்டு காலத்தையோ சில நிமிஷங்களையோ சொல்லலாம்
  8. கதை மாந்தர்கள்?
    கருப்போ சிவப்போ, ஏழையோ பணக்காரனோ, வயசானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்ததாகளோ தர்ம கர்த்தாக்களோ, நாய் வளர்பபவர் களோ பாய் முடைபவர் களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளோ, மீசைக்காரர்களோ ஆசைக்கு அலைபவர் களோ, மீன்பிடிப்பவர்களோ, பஸ்பிடிப்பவர்களோ, சினிமா பார்ப்பவர் களோ இனிமா கொடுப்பவர் களோ, எந்த கதா பாத்திரமும் அதற்குத் தடையில்லை!
    மனிதர்களே இல்லாமல் கூடக் கதை சொல்லலாம். அப்படி ஒரு விஞ்ஞானக் கதை இருக்கிறது
  9. கதையை எப்படிச் சொல்லவேண்டும்?
    கண்ணீர் வர சொல்லலாம். சிரிக்கச் சிரிக்க சொல்லலாம். கோபம் வர ஆர்வம் வர, வெறுப்புவர, படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஒரு உணரச்சியைத் தந்தால் போதும்
  10. விஸ்தாரமாக அறுதியிட்பபடும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவும் இருக்காதே?
    இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம்தான் எனக்குத் தெரிந்தது. படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது சிறுகதையல்ல. பஸ் டிக்கெட். ஒருவாரம் கழித்தோ , ஒரு வருஷம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவரிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்
    13 எப்படிச் சொல்கிறீர்கள்?
    அனுபவத்தில்தான் நான் 1979ல் எழுதிய சிறுகதைகளை இப்போது யாராவது நினைவு வைத்துக்கொண்டு சொல்லும் போது எனக்கு வேறு எந்த சான்றிதழும் தேவையில்லை
    எனவே நல்ல சிறுகதைகள் காலத்தையும் அன்றாட அவசரத்தையும் கடக்கின்றன
    14 இது பேருக்குப் பேர் வேறுபடும் அல்லவா?
    நிச்சயம், எனக்கு நல்ல கதை உங்களுக்கு நல்ல கதையாக இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு கதை உங்களை எந்த விதத்திலும் பாதித்திருந்தால் ஒரு மாதம் அல்லது ஒரு வருஷம் விட்டுக்கூட அதை உங்களால் திருப்பிச் சொல்ல முடியும்
  11. அப்படியென்றால் நல்ல ஞாபகம் உள்ளவர்கள் நல்ல ரசிகர்கள் என்பீர்களா?
    இது ஞாபகப் பிரச்னை அல்ல. கதையின் பெயர்கள் இடம் பொருள் ஏற்பாடெல்லாம் ஞாபகம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் கதைய அடிநாதம் அதில் பாதிதத ஒரு கருத்தோ வரியோ நிச்சசயம் நினைவிருக்கும்
  12. அப்படி நினைவு இல்லையென்றால் ?
    அப்படி இல்லையென்றால் அந்தக் கதை உங்களைப் பொறுத்த வரை தோல்விதான்
    17 இதை வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள ஏற்பாடு என்று சொல்லலாமா?
    ஒரு நட்பு என்று சொல்லலாம். ஒரு வாசகர் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரை ஒரு நண்பரைப்போல் தேர்ந்தெடுக்கிறார். காரணம். அவர் எழுதுவது இவருக்குப் புரிகிறது
    கதையின் ஏதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ஏதே ஒரு விதத்தில் நிரப்புகிறார்
  13. அதற்கு கதை புரியவேண்டும் அல்லவா ?
    ஆம். கதை வாசகருக்கு புரிய வேண்டியது மிக முக்கியமாக கருதுபவன் நான்
    19 சிலர் புரியாமலேயே கதை எழுதுகிறார்களே ?
    அவர்களை பசித்த புலி தின்னட்டும் !
  • ராம் ஸ்ரீதர்