துரித கவிதைகள்/சசிகலா விஸ்வநாதன்

1.நூலறியா விடினும்
ஞாலம் அறிய வேண்டும்.

2.தண்ணீரில் தாமரை
தள்ளாடும்;
வீழுமோ?

  1. நாணயத்திற்கு இரு முகம்;
    நியாயத்திற்கு பல முகம்.

4.இன்று நன்மை என் நினைப்பது;
நாளை நன்மை ஆகாது

5.கல்லாதார் நட்பு
கடு நட்பு

  1. புல்லுக்கு நீர் இறைப்பர் புல்லர்.
  2. சினம் காத்தல் அரிது
    அரியதே பெருமை உடைத்து
  3. தக்காரைப்
    பேண்;
    தகவிலாதவரை தவிர்.

9.எவருக்கும் தன் நிலையில் இருப்பதே பெருமை.

10.இன்சொலால் மலரும் முகம்!
வன் சொலால் கூம்பும்.


24-9-2023