சில்வியா பிளாத் ( 27-10-1932-  11-02-1963  ) அமெரிக்க கவிஞர்

 தமிழில் : தங்கேஸ்

பிளாத் முப்பது  வயதிலேயே தன் வாழ்க்கையை தற்கொலையில் முடித்துக்  கொண்ட உலகப்புகழ் பெற்ற கவிஞர் மற்றும் நாவலசாசிரியர் ஆவார். இவரின்  Confessional poetry or “Confessionalism  ( தன்னிலை வாத கவிதைகள் – தன் வாழ்க்கையினை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட ஒப்புதல் கவிதைகள் – ஐம்பதுகளில் அமெரிக்காவின் மிக முக்கியமான கவிதை உத்தி வளர்ச்சியாகும் .மேலும் நவீனத்துவத்தின் முன்மாதிரி  Postmodernism   என்று அழைக்கப்படுகிறது. சிறு வயதிலிருந்தே தற்கொலை எண்ணம் வேரூன்றி இருந்த பிளாத் தொடர்ச்சியாக மருத்துவ மனைகளில் மனநல சிகிச்சைகள் பெற்று வந்தார். ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒரு முறை என்ற ரீதியில் தற்கொலையை அரங்கேற்றிப்பார்ப்பது இவரது வாடிக்கை .இரண்டு முறை பிழைத்துக் கொண்ட அவர் மூன்றாவது முறை  அதில் வெற்றி பெற்றிருந்தார்.அப்போது அவருக்கு வயது முப்பது மட்டுமே. அதற்குள்   Ted Hughes டெட் ஹியூஸ் என்ற அமெரிக்க கவிஞரை ( விமர்சகர் மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லி ) திருமணம் புரிந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விவகாரத்தும் பெற்று விட்டார் ( கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை கண்டதால் விவகாரத்து பெற்றார் ) ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கை முறிவு பெற்ற போது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அதற்குள் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழத் தொடங்கி விட்டார்

ஆண்களின் துரோகம் சமூகத்தின் போலித்தனம் போன்றவை அவரை துயர்படுத்தின. குழந்தைகள் இரண்டும் பிளாத்தோடுதான் இருந்தன. அதிக மனஉளைச்சலுக்கு ஆளான இரவொன்றில் குழந்தைகளுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாவண்ணம் மிக பாதுகாப்பாக டேப்  துண்டுகள் உடைகளை வைத்து குழந்தைகளின் அறையை பாதுகாப்பாக  அடைத்து விட்டு  மின் அடுப்பில்  ( oven ) தலையை திணித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டார். 

வாழ்க்கை தந்த வெறுமைக்குப் பரிசாக அதற்கு தனது மரணத்தை தந்து மறைந்து போன பெண் கவிஞர் தான் சில்வியா பிளாத்.

கவிதை குறிப்பு 

Lady Lazarus ( கவிதை )

  பெண் லாசரஸ் என்ற இந்தக் கவிதை பிளாத்தின் கவிதைகளில் முக்கியமானதும் உலகப் புகழ்பெற்றதுமாகும்.

 பைபிளின் படி லாசரஸ் என்ற ஆண் புதைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்று இயேசு கடவுளின் மகிமையை உணர்த்துவதற்காக அவனை உயிரோடு எழுப்புகிறார்.

  ஆனால் இங்கே தன்னை பெண் லாசரஸாக தன்னை பாவித்துக் கொள்ளும் பிளாத் தன் மரணத்திலிருந்து தானே உயிர்த்தெழுந்ததாகவும் தன்னை கண்காட்சி போல் பாவித்து பார்வையிடும் இந்த உலகத்தையும் மனிதர்களையும் தான் பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து உயிர்த்து வந்தது காற்றைப் போல விழுங்கி விடுவதற்கே  என்றும் கூறுகிறார்.

  அதை விட பிளாத் இந்த கவிதைகளில் நம் மனதில் உயர்ந்து நிற்பதற்கு இன்னொரு காரணமுண்டு. அது தான் தன்னை எப்பொழுதும் பலவீனர்களோடும் அநியாயத்தால் பாதிக்கப்பட்டவோர்களோடு அடையாளம் கண்டு கொண்டு அவர்களுக்காக கவிதை வழியாக குரல் கொடுக்கும் கவித்துவ குணம்

  இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின்  வதைமுகாம்களில் நாஜிக்களின் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி யூதர்களை ஒன்றாக கொன்று குவித்து பல அபத்தமான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தார்கள்.  அவர்களை எரித்த சாம்பலைக் கிளறி  கிளறி ஏதாவது தங்க நாணயங்கள் திருமண மோதிரங்கள் அதில் கிடைக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களினின் தோல்களை உரித்து தங்களது அலங்கார விளக்குகளுக்கு மேல் அதை ஒட்டி அழகு படுத்திக் பார்த்தார்கள். 

  இதையெல்லாம் கண்ட பிளாத் தன்னை ஒரு யூதப் பெண் என்று பகிரங்கமாக இந்தக் கவிதையில் பிரகடணப்படுத்திக் கொள்கிறார். தான் வதை முகாமில் இருப்பதாகவும் தன் சாம்பலை கிளறினால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்றும் ஆனால் தான் அவர்களுக்கு மரணத்தை பரிசளிக்க மீண்டு எழுந்து வரப்போவதாகவும் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்ல நாஜிக்களின் மருத்துவர் .பணியாளர்கள் அவர்களின் கடவுள் சாத்தான் என்று அத்தனை பேரையும் பார்த்து குற்றவாளிக்கூண்டில் நிற்க வைத்து கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்.

   மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலையை கொண்டாடுவது போல் இந்தக் கவிதை தோன்றினாலும் ஆண் ஆதிக்கத்திற்கும்  அவலமான சமூகத்திற்கும் எதிர்வினையாக பெண்மையின் உணர்ச்சிக் கொந்தளிப்பான குரலாக இந்தக் கவிதை இங்கே ஒலிப்பதை காணலாம். இனி கவிதை

Lady Lazarus

BY SYLVIA PLATH

பெண் லாசரஸ்

சில்வியா பிளாத்

பத்து வருடங்களுக்கு ஒரு முறை

அதை நான் வெற்றிகரமாக

பரீட்சித்துப் பார்த்துவிடுகிறேன்

நான் ஒரு நடக்கும் அதிசயம்

நாசிக்களின் அலங்கார  விளக்காக மாறி  இருக்கிறது

எனது அங்கத்திலிருந்து உரித்தெடுக்கப்பட்ட

மேல் தொலி

என் வலது கால் 

ஒரு காகித எடை தாங்கி

களையற்ற என் முகமோ

உடல்களின் மீது போர்த்தும்..

யூதர்களின் சவத்துணி

ஓ என் எதிரியே !

என் முகத்தை போர்த்தியிருக்கும்

சவத்துணியை அகற்று

நான் உன்னை பயமுறுத்துகிறேனா ?

என் மூக்கு 

விழிகள் இருந்த இடத்தில்

இப்போது தென்படும்

கண்குழிகள்

பற்களின் முழுத் தொகுப்பு

யாவும்  யாவும் ஒரிரு நாட்களில்

காணாமல் போய்விடும்

கல்லறை குழிகள்

தின்ற என் தேகத்தின் சதைகள்

விரைவில் என்னுடன் வீட்டிலிருக்கும்

நான் ஒரு மகிழ்ச்சியான பெண் !

என் வயது முப்பது தான்

ஒரு பூனையைப் போல 

ஒன்பது முறை நான் இறக்க வேண்டும்

இது மூன்றாம் முறை தான்

ஆனாலும் என்ன  ?

குப்பை தானே இந்த வாழ்க்கை

பத்தாண்டுகளுக்கு  ஒருமுறை

அழித்து விடவேண்டியது தானே                                                                                                                                                                                                                                                   

கோடி கோடி இழைகளால்

நெய்யப்பட்டது காட்சிப்படுத்தப்பட்ட

இந்த என்  உடல் !

பாருங்கள்

இதை வேடிக்கை பார்க்க 

நெருக்கியடித்து தள்ளுகிறது  கூட்டம்

கேளிக்கையென 

வேடிக்கை பார்க்க வந்த கூட்டமே !

மரியாதைக்குரிய ஆண்களே பெண்களே !

என் ஆடையை அவிழ்த்தெறியுங்கள்

பாருங்கள் 

இது தான் என் கரங்கள்….

இது என் முழங்கால்…

இது என் எலும்புகள் இது என் தோல்

எல்லாம் சேர்த்தது தான் நான்

நான் ஒரு பெண்  

பழைய அதே பெண்

அது முதல் முறை நடந்த போது

அது ஒரு விபத்து

அப்போது  எனக்குப் பத்து வயது

இரண்டாம் முறை அது நடந்த போது

அதை நீட்டிக்கவே விரும்பினேன்

அதனிடமிருந்து திரும்பி வரவே மனதில்லை

ஒரு சிப்பியைப்போல 

பலவந்தமாய் அதில் என்னை மூடிக்கொண்டேன்.

அவர்கள் என்னை 

அழைத்துக் கொண்டே இருந்தார்கள்

சிப்பியில்

ஒட்டிக்கொண்ட முத்துக்களை 

பிய்த்தெடுப்பதைப்போல

என் உடலில் இருந்து புழுக்களைப் 

பிய்த்தெடுத்தார்கள்

யாவற்றையும் போல 

இறப்பும் ஒருகலையே ! 

அதை நான் மிக அற்புதமாக 

அரங்கேற்றினேன்

நான் ஏன் அவ்விதம் செய்தேன் ?

ஏனென்றால் இங்கே நான் 

நரகம் போல் உணர்ந்தேன்

நான் ஏன் அவ்விதம் செய்தேன் ?

ஏனென்றால்

அதை உண்மையென உணர்ந்தேன்

எனக்கொரு அழைப்பு வந்திருக்குமென்று

நீங்கள் யூகிக்கலாம்

ஒரு அறையில் அமர்ந்து கொண்டு

இதை நிறைவேற்றுவது எளிது 

நிறைவேற்றி விட்டு 

அமர்ந்திருப்பது அதனினும் எளிது

மறுபடியும் அரங்கேறும் காட்சிகள்

விடியல் வெளிச்சத்தில்

அதே இடம் அதே முகம்

அதே விலங்குகள்

அதே கூச்சல்

அது அதிசயம் தான்

ஆனால் கட்டற்ற கூச்சல் தான் 

என்னை சாய்க்கிறது

வாருங்கள் இறந்து மீண்டவளை பார்வையிட!

ஆனால் பார்வையிட ஒரு கட்டணமுண்டு

ஒவ்வொரு அங்கத்திற்கும் 

ஒரு பிரத்யேக கட்டணம்

முதலில் வடுக்களுக்கு , 

பிறகு இதயத்தின் துடிப்போசைகளை

கேட்பதற்கு

ஒரு வார்த்தைக்கு

ஒரு தொடலுக்கு

என்னுடைய ஒரு துளி ரத்தத்தை தொடுவதற்கும்

மிகப்பெரும் கட்டணமுண்டு

வாருங்கள் கட்டணமுண்டு

என்னுடைய ஒற்றை தலைமுடிக்கு

உடைகளுக்கு

மிகப்பெரும் கட்டணமுண்டு

ஆகையால்

திரு மருத்துவர் அவர்களே !

திரு எதிரி அவர்களே !

இன்று நான் உங்கள் இசை விருந்து 

இன்று நான் உங்களுக்கு

ஒரு விலைமதிப்பற்ற பொருள்

ஒரு தங்க குழந்தை

ஒரு அலறுக்கு உருகிப்போவேன்

என்னை நானே  மீண்டும் எரிப்பேன்

ஆனால் நானே

மரியாதைக்குரியவர்களே !

என்னுடல் மீதான 

உங்கள் அக்கறையை 

ஒரு போதும் குறைத்து மதிப்பிடுவேன்

என்று எண்ணாதீர்கள்

என்னுடைய சாம்பலை என்ன செய்வாய் ?

சாம்பலை என்ன செய்வாய் ?

குச்சியால் கிளறிப்பார்ப்பாய்

தசைகள் எலும்புகள் எலும்புகள்

வேறேதும் இல்லை அங்கே

ஒரு கேக் சோப்

ஒரு திருமண மோதிரம்

சில தங்க துணுக்குகள்

வேறேதும் இல்லை

திருவாளர் கடவுளே !

திருவாளர் சாத்தானே ! 

ஜாக்கிரதை

எச்சரிக்கையாக இருங்கள்

சாம்பலிலிருந்து

என் சிவப்பு நிற தலைமுடியுடன்

நான் மீண்டும் எழுவேன்

பிறகு மனிதர்களை காற்றைப் போல

உண்டுவிடுவேன்

மூலம்  சில்வியா பிளாத்

தமிழ் மொழி  பெயர்ப்பு  தங்கேஸ்

Lady Lazarus

BY SYLVIA PLATH

I have done it again.   

One year in every ten   

I manage it——

A sort of walking miracle, my skin   

Bright as a Nazi lampshade,   

My right foot

A paperweight,

My face a featureless, fine   

Jew linen.

Peel off the napkin   

O my enemy.   

Do I terrify?——

The nose, the eye pits, the full set of teeth?   

The sour breath

Will vanish in a day.

Soon, soon the flesh

The grave cave ate will be   

At home on me

And I a smiling woman.   

I am only thirty.

And like the cat I have nine times to die.

This is Number Three.   

What a trash

To annihilate each decade.

What a million filaments.   

The peanut-crunching crowd   

Shoves in to see

Them unwrap me hand and foot——

The big strip tease.   

Gentlemen, ladies

These are my hands   

My knees.

I may be skin and bone,

Nevertheless, I am the same, identical woman.   

The first time it happened I was ten.   

It was an accident.

The second time I meant

To last it out and not come back at all.   

I rocked shut

As a seashell.

They had to call and call

And pick the worms off me like sticky pearls.

Dying

Is an art, like everything else.   

I do it exceptionally well.

I do it so it feels like hell.   

I do it so it feels real.

I guess you could say I’ve a call.

It’s easy enough to do it in a cell.

It’s easy enough to do it and stay put.   

It’s the theatrical

Comeback in broad day

To the same place, the same face, the same brute   

Amused shout:

‘A miracle!’

That knocks me out.   

There is a charge

For the eyeing of my scars, there is a charge   

For the hearing of my heart——

It really goes.

And there is a charge, a very large charge   

For a word or a touch   

Or a bit of blood

Or a piece of my hair or my clothes.   

So, so, Herr Doktor.   

So, Herr Enemy.

I am your opus,

I am your valuable,   

The pure gold baby

That melts to a shriek.   

I turn and burn.

Do not think I underestimate your great concern.

Ash, ash—

You poke and stir.

Flesh, bone, there is nothing there——

A cake of soap,   

A wedding ring,   

A gold filling.

Herr God, Herr Lucifer   

Beware

Beware.

Out of the ash

I rise with my red hair   

And I eat men like air.

இதை விருட்சம் அச்சிதழிலும் பயன் படுத்துகிறேன்.

Hide quoted text

On Thu, 19 Oct 2023, 17:57 Koodalingm Thangeswaran, <thanges1970@gmail.com> wrote:

மொழி பெயர்ப்பு 

 சில்வியா பிளாத் ( 27-10-1932-  11-02-1963  ) அமெரிக்க கவிஞர்

பிளாத் முப்பது  வயதிலேயே தன் வாழ்க்கையை தற்கொலையில் முடித்துக்  கொண்ட உலகப்புகழ் பெற்ற கவிஞர் மற்றும் நாவலசாசிரியர் ஆவார். இவரின்  Confessional poetry or “Confessionalism  ( தன்னிலை வாத கவிதைகள் – தன் வாழ்க்கையினை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட ஒப்புதல் கவிதைகள் – ஐம்பதுகளில் அமெரிக்காவின் மிக முக்கியமான கவிதை உத்தி வளர்ச்சியாகும் .மேலும் நவீனத்துவத்தின் முன்மாதிரி  Postmodernism   என்று அழைக்கப்படுகிறது. சிறு வயதிலிருந்தே தற்கொலை எண்ணம் வேரூன்றி இருந்த பிளாத் தொடர்ச்சியாக மருத்துவ மனைகளில் மனநல சிகிச்சைகள் பெற்று வந்தார். ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒரு முறை என்ற ரீதியில் தற்கொலையை அரங்கேற்றிப்பார்ப்பது இவரது வாடிக்கை .இரண்டு முறை பிழைத்துக் கொண்ட அவர் மூன்றாவது முறை  அதில் வெற்றி பெற்றிருந்தார்.அப்போது அவருக்கு வயது முப்பது மட்டுமே. அதற்குள்   Ted Hughes டெட் ஹியூஸ் என்ற அமெரிக்க கவிஞரை ( விமர்சகர் மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லி ) திருமணம் புரிந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விவகாரத்தும் பெற்று விட்டார் ( கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை கண்டதால் விவகாரத்து பெற்றார் ) ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கை முறிவு பெற்ற போது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அதற்குள் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழத் தொடங்கி விட்டார்

ஆண்களின் துரோகம் சமூகத்தின் போலித்தனம் போன்றவை அவரை துயர்படுத்தின. குழந்தைகள் இரண்டும் பிளாத்தோடுதான் இருந்தன. அதிக மனஉளைச்சலுக்கு ஆளான இரவொன்றில் குழந்தைகளுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாவண்ணம் மிக பாதுகாப்பாக டேப்  துண்டுகள் உடைகளை வைத்து குழந்தைகளின் அறையை பாதுகாப்பாக  அடைத்து விட்டு  மின் அடுப்பில்  ( oven ) தலையை திணித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டார். 

வாழ்க்கை தந்த வெறுமைக்குப் பரிசாக அதற்கு தனது மரணத்தை தந்து மறைந்து போன பெண் கவிஞர் தான் சில்வியா பிளாத்.

கவிதை குறிப்பு 

Lady Lazarus ( கவிதை )

  பெண் லாசரஸ் என்ற இந்தக் கவிதை பிளாத்தின் கவிதைகளில் முக்கியமானதும் உலகப் புகழ்பெற்றதுமாகும்.

 பைபிளின் படி லாசரஸ் என்ற ஆண் புதைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்று இயேசு கடவுளின் மகிமையை உணர்த்துவதற்காக அவனை உயிரோடு எழுப்புகிறார்.

  ஆனால் இங்கே தன்னை பெண் லாசரஸாக தன்னை பாவித்துக் கொள்ளும் பிளாத் தன் மரணத்திலிருந்து தானே உயிர்த்தெழுந்ததாகவும் தன்னை கண்காட்சி போல் பாவித்து பார்வையிடும் இந்த உலகத்தையும் மனிதர்களையும் தான் பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து உயிர்த்து வந்தது காற்றைப் போல விழுங்கி விடுவதற்கே  என்றும் கூறுகிறார்.

  அதை விட பிளாத் இந்த கவிதைகளில் நம் மனதில் உயர்ந்து நிற்பதற்கு இன்னொரு காரணமுண்டு. அது தான் தன்னை எப்பொழுதும் பலவீனர்களோடும் அநியாயத்தால் பாதிக்கப்பட்டவோர்களோடு அடையாளம் கண்டு கொண்டு அவர்களுக்காக கவிதை வழியாக குரல் கொடுக்கும் கவித்துவ குணம்

  இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின்  வதைமுகாம்களில் நாஜிக்களின் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி யூதர்களை ஒன்றாக கொன்று குவித்து பல அபத்தமான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தார்கள்.  அவர்களை எரித்த சாம்பலைக் கிளறி  கிளறி ஏதாவது தங்க நாணயங்கள் திருமண மோதிரங்கள் அதில் கிடைக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களினின் தோல்களை உரித்து தங்களது அலங்கார விளக்குகளுக்கு மேல் அதை ஒட்டி அழகு படுத்திக் பார்த்தார்கள். 

  இதையெல்லாம் கண்ட பிளாத் தன்னை ஒரு யூதப் பெண் என்று பகிரங்கமாக இந்தக் கவிதையில் பிரகடணப்படுத்திக் கொள்கிறார். தான் வதை முகாமில் இருப்பதாகவும் தன் சாம்பலை கிளறினால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்றும் ஆனால் தான் அவர்களுக்கு மரணத்தை பரிசளிக்க மீண்டு எழுந்து வரப்போவதாகவும் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்ல நாஜிக்களின் மருத்துவர் .பணியாளர்கள் அவர்களின் கடவுள் சாத்தான் என்று அத்தனை பேரையும் பார்த்து குற்றவாளிக்கூண்டில் நிற்க வைத்து கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்.

   மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலையை கொண்டாடுவது போல் இந்தக் கவிதை தோன்றினாலும் ஆண் ஆதிக்கத்திற்கும்  அவலமான சமூகத்திற்கும் எதிர்வினையாக பெண்மையின் உணர்ச்சிக் கொந்தளிப்பான குரலாக இந்தக் கவிதை இங்கே ஒலிப்பதை காணலாம். இனி கவிதை

Lady Lazarus

BY SYLVIA PLATH

பெண் லாசரஸ்

சில்வியா பிளாத்

பத்து வருடங்களுக்கு ஒரு முறை

அதை நான் வெற்றிகரமாக

பரீட்சித்துப் பார்த்துவிடுகிறேன்

நான் ஒரு நடக்கும் அதிசயம்

நாசிக்களின் அலங்கார  விளக்காக மாறி  இருக்கிறது

எனது அங்கத்திலிருந்து உரித்தெடுக்கப்பட்ட

மேல் தொலி

என் வலது கால் 

ஒரு காகித எடை தாங்கி

களையற்ற என் முகமோ

உடல்களின் மீது போர்த்தும்..

யூதர்களின் சவத்துணி

ஓ என் எதிரியே !

என் முகத்தை போர்த்தியிருக்கும்

சவத்துணியை அகற்று

நான் உன்னை பயமுறுத்துகிறேனா ?

என் மூக்கு 

விழிகள் இருந்த இடத்தில்

இப்போது தென்படும்

கண்குழிகள்

பற்களின் முழுத் தொகுப்பு

யாவும்  யாவும் ஒரிரு நாட்களில்

காணாமல் போய்விடும்

கல்லறை குழிகள்

தின்ற என் தேகத்தின் சதைகள்

விரைவில் என்னுடன் வீட்டிலிருக்கும்

நான் ஒரு மகிழ்ச்சியான பெண் !

என் வயது முப்பது தான்

ஒரு பூனையைப் போல 

ஒன்பது முறை நான் இறக்க வேண்டும்

இது மூன்றாம் முறை தான்

ஆனாலும் என்ன  ?

குப்பை தானே இந்த வாழ்க்கை

பத்தாண்டுகளுக்கு  ஒருமுறை

அழித்து விடவேண்டியது தானே                                                                                                                                                                                                                                                   

கோடி கோடி இழைகளால்

நெய்யப்பட்டது காட்சிப்படுத்தப்பட்ட

இந்த என்  உடல் !

பாருங்கள்

இதை வேடிக்கை பார்க்க 

நெருக்கியடித்து தள்ளுகிறது  கூட்டம்

கேளிக்கையென 

வேடிக்கை பார்க்க வந்த கூட்டமே !

மரியாதைக்குரிய ஆண்களே பெண்களே !

என் ஆடையை அவிழ்த்தெறியுங்கள்

பாருங்கள் 

இது தான் என் கரங்கள்….

இது என் முழங்கால்…

இது என் எலும்புகள் இது என் தோல்

எல்லாம் சேர்த்தது தான் நான்

நான் ஒரு பெண்  

பழைய அதே பெண்

அது முதல் முறை நடந்த போது

அது ஒரு விபத்து

அப்போது  எனக்குப் பத்து வயது

இரண்டாம் முறை அது நடந்த போது

அதை நீட்டிக்கவே விரும்பினேன்

அதனிடமிருந்து திரும்பி வரவே மனதில்லை

ஒரு சிப்பியைப்போல 

பலவந்தமாய் அதில் என்னை மூடிக்கொண்டேன்.

அவர்கள் என்னை 

அழைத்துக் கொண்டே இருந்தார்கள்

சிப்பியில்

ஒட்டிக்கொண்ட முத்துக்களை 

பிய்த்தெடுப்பதைப்போல

என் உடலில் இருந்து புழுக்களைப் 

பிய்த்தெடுத்தார்கள்

யாவற்றையும் போல 

இறப்பும் ஒருகலையே ! 

அதை நான் மிக அற்புதமாக 

அரங்கேற்றினேன்

நான் ஏன் அவ்விதம் செய்தேன் ?

ஏனென்றால் இங்கே நான் 

நரகம் போல் உணர்ந்தேன்

நான் ஏன் அவ்விதம் செய்தேன் ?

ஏனென்றால்

அதை உண்மையென உணர்ந்தேன்

எனக்கொரு அழைப்பு வந்திருக்குமென்று

நீங்கள் யூகிக்கலாம்

ஒரு அறையில் அமர்ந்து கொண்டு

இதை நிறைவேற்றுவது எளிது 

நிறைவேற்றி விட்டு 

அமர்ந்திருப்பது அதனினும் எளிது

மறுபடியும் அரங்கேறும் காட்சிகள்

விடியல் வெளிச்சத்தில்

அதே இடம் அதே முகம்

அதே விலங்குகள்

அதே கூச்சல்

அது அதிசயம் தான்

ஆனால் கட்டற்ற கூச்சல் தான் 

என்னை சாய்க்கிறது

வாருங்கள் இறந்து மீண்டவளை பார்வையிட!

ஆனால் பார்வையிட ஒரு கட்டணமுண்டு

ஒவ்வொரு அங்கத்திற்கும் 

ஒரு பிரத்யேக கட்டணம்

முதலில் வடுக்களுக்கு , 

பிறகு இதயத்தின் துடிப்போசைகளை

கேட்பதற்கு

ஒரு வார்த்தைக்கு

ஒரு தொடலுக்கு

என்னுடைய ஒரு துளி ரத்தத்தை தொடுவதற்கும்

மிகப்பெரும் கட்டணமுண்டு

வாருங்கள் கட்டணமுண்டு

என்னுடைய ஒற்றை தலைமுடிக்கு

உடைகளுக்கு

மிகப்பெரும் கட்டணமுண்டு

ஆகையால்

திரு மருத்துவர் அவர்களே !

திரு எதிரி அவர்களே !

இன்று நான் உங்கள் இசை விருந்து 

இன்று நான் உங்களுக்கு

ஒரு விலைமதிப்பற்ற பொருள்

ஒரு தங்க குழந்தை

ஒரு அலறுக்கு உருகிப்போவேன்

என்னை நானே  மீண்டும் எரிப்பேன்

ஆனால் நானே

மரியாதைக்குரியவர்களே !

என்னுடல் மீதான 

உங்கள் அக்கறையை 

ஒரு போதும் குறைத்து மதிப்பிடுவேன்

என்று எண்ணாதீர்கள்

என்னுடைய சாம்பலை என்ன செய்வாய் ?

சாம்பலை என்ன செய்வாய் ?

குச்சியால் கிளறிப்பார்ப்பாய்

தசைகள் எலும்புகள் எலும்புகள்

வேறேதும் இல்லை அங்கே

ஒரு கேக் சோப்

ஒரு திருமண மோதிரம்

சில தங்க துணுக்குகள்

வேறேதும் இல்லை

திருவாளர் கடவுளே !

திருவாளர் சாத்தானே ! 

ஜாக்கிரதை

எச்சரிக்கையாக இருங்கள்

சாம்பலிலிருந்து

என் சிவப்பு நிற தலைமுடியுடன்

நான் மீண்டும் எழுவேன்

பிறகு மனிதர்களை காற்றைப் போல

உண்டுவிடுவேன்

மூலம்  சில்வியா பிளாத்

தமிழ் மொழி  பெயர்ப்பு  தங்கேஸ்

Lady Lazarus

BY SYLVIA PLATH

I have done it again.   

One year in every ten   

I manage it——

A sort of walking miracle, my skin   

Bright as a Nazi lampshade,   

My right foot

A paperweight,

My face a featureless, fine   

Jew linen.

Peel off the napkin   

O my enemy.   

Do I terrify?——

The nose, the eye pits, the full set of teeth?   

The sour breath

Will vanish in a day.

Soon, soon the flesh

The grave cave ate will be   

At home on me

And I a smiling woman.   

I am only thirty.

And like the cat I have nine times to die.

This is Number Three.   

What a trash

To annihilate each decade.

What a million filaments.   

The peanut-crunching crowd   

Shoves in to see

Them unwrap me hand and foot——

The big strip tease.   

Gentlemen, ladies

These are my hands   

My knees.

I may be skin and bone,

Nevertheless, I am the same, identical woman.   

The first time it happened I was ten.   

It was an accident.

The second time I meant

To last it out and not come back at all.   

I rocked shut

As a seashell.

They had to call and call

And pick the worms off me like sticky pearls.

Dying

Is an art, like everything else.   

I do it exceptionally well.

I do it so it feels like hell.   

I do it so it feels real.

I guess you could say I’ve a call.

It’s easy enough to do it in a cell.

It’s easy enough to do it and stay put.   

It’s the theatrical

Comeback in broad day

To the same place, the same face, the same brute   

Amused shout:

‘A miracle!’

That knocks me out.   

There is a charge

For the eyeing of my scars, there is a charge   

For the hearing of my heart——

It really goes.

And there is a charge, a very large charge   

For a word or a touch   

Or a bit of blood

Or a piece of my hair or my clothes.   

So, so, Herr Doktor.   

So, Herr Enemy.

I am your opus,

I am your valuable,   

The pure gold baby

That melts to a shriek.   

I turn and burn.

Do not think I underestimate your great concern.

Ash, ash—

You poke and stir.

Flesh, bone, there is nothing there——

A cake of soap,   

A wedding ring,   

A gold filling.

Herr God, Herr Lucifer   

Beware

Beware.

Out of the ash

I rise with my red hair   

And I eat men like air.

மொழி பெயர்ப்பு 

 சில்வியா பிளாத் ( 27-10-1932-  11-02-1963  ) அமெரிக்க கவிஞர்

பிளாத் முப்பது  வயதிலேயே தன் வாழ்க்கையை தற்கொலையில் முடித்துக்  கொண்ட உலகப்புகழ் பெற்ற கவிஞர் மற்றும் நாவலசாசிரியர் ஆவார். இவரின்  Confessional poetry or “Confessionalism  ( தன்னிலை வாத கவிதைகள் – தன் வாழ்க்கையினை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட ஒப்புதல் கவிதைகள் – ஐம்பதுகளில் அமெரிக்காவின் மிக முக்கியமான கவிதை உத்தி வளர்ச்சியாகும் .மேலும் நவீனத்துவத்தின் முன்மாதிரி  Postmodernism   என்று அழைக்கப்படுகிறது. சிறு வயதிலிருந்தே தற்கொலை எண்ணம் வேரூன்றி இருந்த பிளாத் தொடர்ச்சியாக மருத்துவ மனைகளில் மனநல சிகிச்சைகள் பெற்று வந்தார். ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒரு முறை என்ற ரீதியில் தற்கொலையை அரங்கேற்றிப்பார்ப்பது இவரது வாடிக்கை .இரண்டு முறை பிழைத்துக் கொண்ட அவர் மூன்றாவது முறை  அதில் வெற்றி பெற்றிருந்தார்.அப்போது அவருக்கு வயது முப்பது மட்டுமே. அதற்குள்   Ted Hughes டெட் ஹியூஸ் என்ற அமெரிக்க கவிஞரை ( விமர்சகர் மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லி ) திருமணம் புரிந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விவகாரத்தும் பெற்று விட்டார் ( கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை கண்டதால் விவகாரத்து பெற்றார் ) ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கை முறிவு பெற்ற போது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அதற்குள் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழத் தொடங்கி விட்டார்

ஆண்களின் துரோகம் சமூகத்தின் போலித்தனம் போன்றவை அவரை துயர்படுத்தின. குழந்தைகள் இரண்டும் பிளாத்தோடுதான் இருந்தன. அதிக மனஉளைச்சலுக்கு ஆளான இரவொன்றில் குழந்தைகளுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாவண்ணம் மிக பாதுகாப்பாக டேப்  துண்டுகள் உடைகளை வைத்து குழந்தைகளின் அறையை பாதுகாப்பாக  அடைத்து விட்டு  மின் அடுப்பில்  ( oven ) தலையை திணித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டார். 

வாழ்க்கை தந்த வெறுமைக்குப் பரிசாக அதற்கு தனது மரணத்தை தந்து மறைந்து போன பெண் கவிஞர் தான் சில்வியா பிளாத்.

கவிதை குறிப்பு 

Lady Lazarus ( கவிதை )

  பெண் லாசரஸ் என்ற இந்தக் கவிதை பிளாத்தின் கவிதைகளில் முக்கியமானதும் உலகப் புகழ்பெற்றதுமாகும்.

 பைபிளின் படி லாசரஸ் என்ற ஆண் புதைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்று இயேசு கடவுளின் மகிமையை உணர்த்துவதற்காக அவனை உயிரோடு எழுப்புகிறார்.

  ஆனால் இங்கே தன்னை பெண் லாசரஸாக தன்னை பாவித்துக் கொள்ளும் பிளாத் தன் மரணத்திலிருந்து தானே உயிர்த்தெழுந்ததாகவும் தன்னை கண்காட்சி போல் பாவித்து பார்வையிடும் இந்த உலகத்தையும் மனிதர்களையும் தான் பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து உயிர்த்து வந்தது காற்றைப் போல விழுங்கி விடுவதற்கே  என்றும் கூறுகிறார்.

  அதை விட பிளாத் இந்த கவிதைகளில் நம் மனதில் உயர்ந்து நிற்பதற்கு இன்னொரு காரணமுண்டு. அது தான் தன்னை எப்பொழுதும் பலவீனர்களோடும் அநியாயத்தால் பாதிக்கப்பட்டவோர்களோடு அடையாளம் கண்டு கொண்டு அவர்களுக்காக கவிதை வழியாக குரல் கொடுக்கும் கவித்துவ குணம்

  இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின்  வதைமுகாம்களில் நாஜிக்களின் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி யூதர்களை ஒன்றாக கொன்று குவித்து பல அபத்தமான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தார்கள்.  அவர்களை எரித்த சாம்பலைக் கிளறி  கிளறி ஏதாவது தங்க நாணயங்கள் திருமண மோதிரங்கள் அதில் கிடைக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களினின் தோல்களை உரித்து தங்களது அலங்கார விளக்குகளுக்கு மேல் அதை ஒட்டி அழகு படுத்திக் பார்த்தார்கள். 

  இதையெல்லாம் கண்ட பிளாத் தன்னை ஒரு யூதப் பெண் என்று பகிரங்கமாக இந்தக் கவிதையில் பிரகடணப்படுத்திக் கொள்கிறார். தான் வதை முகாமில் இருப்பதாகவும் தன் சாம்பலை கிளறினால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்றும் ஆனால் தான் அவர்களுக்கு மரணத்தை பரிசளிக்க மீண்டு எழுந்து வரப்போவதாகவும் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்ல நாஜிக்களின் மருத்துவர் .பணியாளர்கள் அவர்களின் கடவுள் சாத்தான் என்று அத்தனை பேரையும் பார்த்து குற்றவாளிக்கூண்டில் நிற்க வைத்து கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்.

   மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலையை கொண்டாடுவது போல் இந்தக் கவிதை தோன்றினாலும் ஆண் ஆதிக்கத்திற்கும்  அவலமான சமூகத்திற்கும் எதிர்வினையாக பெண்மையின் உணர்ச்சிக் கொந்தளிப்பான குரலாக இந்தக் கவிதை இங்கே ஒலிப்பதை காணலாம். இனி கவிதை

Lady Lazarus

BY SYLVIA PLATH

பெண் லாசரஸ்

சில்வியா பிளாத்

பத்து வருடங்களுக்கு ஒரு முறை

அதை நான் வெற்றிகரமாக

பரீட்சித்துப் பார்த்துவிடுகிறேன்

நான் ஒரு நடக்கும் அதிசயம்

நாசிக்களின் அலங்கார  விளக்காக மாறி  இருக்கிறது

எனது அங்கத்திலிருந்து உரித்தெடுக்கப்பட்ட

மேல் தொலி

என் வலது கால் 

ஒரு காகித எடை தாங்கி

களையற்ற என் முகமோ

உடல்களின் மீது போர்த்தும்..

யூதர்களின் சவத்துணி

ஓ என் எதிரியே !

என் முகத்தை போர்த்தியிருக்கும்

சவத்துணியை அகற்று

நான் உன்னை பயமுறுத்துகிறேனா ?

என் மூக்கு 

விழிகள் இருந்த இடத்தில்

இப்போது தென்படும்

கண்குழிகள்

பற்களின் முழுத் தொகுப்பு

யாவும்  யாவும் ஒரிரு நாட்களில்

காணாமல் போய்விடும்

கல்லறை குழிகள்

தின்ற என் தேகத்தின் சதைகள்

விரைவில் என்னுடன் வீட்டிலிருக்கும்

நான் ஒரு மகிழ்ச்சியான பெண் !

என் வயது முப்பது தான்

ஒரு பூனையைப் போல 

ஒன்பது முறை நான் இறக்க வேண்டும்

இது மூன்றாம் முறை தான்

ஆனாலும் என்ன  ?

குப்பை தானே இந்த வாழ்க்கை

பத்தாண்டுகளுக்கு  ஒருமுறை

அழித்து விடவேண்டியது தானே                                                                                                                                                                                                                                                   

கோடி கோடி இழைகளால்

நெய்யப்பட்டது காட்சிப்படுத்தப்பட்ட

இந்த என்  உடல் !

பாருங்கள்

இதை வேடிக்கை பார்க்க 

நெருக்கியடித்து தள்ளுகிறது  கூட்டம்

கேளிக்கையென 

வேடிக்கை பார்க்க வந்த கூட்டமே !

மரியாதைக்குரிய ஆண்களே பெண்களே !

என் ஆடையை அவிழ்த்தெறியுங்கள்

பாருங்கள் 

இது தான் என் கரங்கள்….

இது என் முழங்கால்…

இது என் எலும்புகள் இது என் தோல்

எல்லாம் சேர்த்தது தான் நான்

நான் ஒரு பெண்  

பழைய அதே பெண்

அது முதல் முறை நடந்த போது

அது ஒரு விபத்து

அப்போது  எனக்குப் பத்து வயது

இரண்டாம் முறை அது நடந்த போது

அதை நீட்டிக்கவே விரும்பினேன்

அதனிடமிருந்து திரும்பி வரவே மனதில்லை

ஒரு சிப்பியைப்போல 

பலவந்தமாய் அதில் என்னை மூடிக்கொண்டேன்.

அவர்கள் என்னை 

அழைத்துக் கொண்டே இருந்தார்கள்

சிப்பியில்

ஒட்டிக்கொண்ட முத்துக்களை 

பிய்த்தெடுப்பதைப்போல

என் உடலில் இருந்து புழுக்களைப் 

பிய்த்தெடுத்தார்கள்

யாவற்றையும் போல 

இறப்பும் ஒருகலையே ! 

அதை நான் மிக அற்புதமாக 

அரங்கேற்றினேன்

நான் ஏன் அவ்விதம் செய்தேன் ?

ஏனென்றால் இங்கே நான் 

நரகம் போல் உணர்ந்தேன்

நான் ஏன் அவ்விதம் செய்தேன் ?

ஏனென்றால்

அதை உண்மையென உணர்ந்தேன்

எனக்கொரு அழைப்பு வந்திருக்குமென்று

நீங்கள் யூகிக்கலாம்

ஒரு அறையில் அமர்ந்து கொண்டு

இதை நிறைவேற்றுவது எளிது 

நிறைவேற்றி விட்டு 

அமர்ந்திருப்பது அதனினும் எளிது

மறுபடியும் அரங்கேறும் காட்சிகள்

விடியல் வெளிச்சத்தில்

அதே இடம் அதே முகம்

அதே விலங்குகள்

அதே கூச்சல்

அது அதிசயம் தான்

ஆனால் கட்டற்ற கூச்சல் தான் 

என்னை சாய்க்கிறது

வாருங்கள் இறந்து மீண்டவளை பார்வையிட!

ஆனால் பார்வையிட ஒரு கட்டணமுண்டு

ஒவ்வொரு அங்கத்திற்கும் 

ஒரு பிரத்யேக கட்டணம்

முதலில் வடுக்களுக்கு , 

பிறகு இதயத்தின் துடிப்போசைகளை

கேட்பதற்கு

ஒரு வார்த்தைக்கு

ஒரு தொடலுக்கு

என்னுடைய ஒரு துளி ரத்தத்தை தொடுவதற்கும்

மிகப்பெரும் கட்டணமுண்டு

வாருங்கள் கட்டணமுண்டு

என்னுடைய ஒற்றை தலைமுடிக்கு

உடைகளுக்கு

மிகப்பெரும் கட்டணமுண்டு

ஆகையால்

திரு மருத்துவர் அவர்களே !

திரு எதிரி அவர்களே !

இன்று நான் உங்கள் இசை விருந்து 

இன்று நான் உங்களுக்கு

ஒரு விலைமதிப்பற்ற பொருள்

ஒரு தங்க குழந்தை

ஒரு அலறுக்கு உருகிப்போவேன்

என்னை நானே  மீண்டும் எரிப்பேன்

ஆனால் நானே

மரியாதைக்குரியவர்களே !

என்னுடல் மீதான 

உங்கள் அக்கறையை 

ஒரு போதும் குறைத்து மதிப்பிடுவேன்

என்று எண்ணாதீர்கள்

என்னுடைய சாம்பலை என்ன செய்வாய் ?

சாம்பலை என்ன செய்வாய் ?

குச்சியால் கிளறிப்பார்ப்பாய்

தசைகள் எலும்புகள் எலும்புகள்

வேறேதும் இல்லை அங்கே

ஒரு கேக் சோப்

ஒரு திருமண மோதிரம்

சில தங்க துணுக்குகள்

வேறேதும் இல்லை

திருவாளர் கடவுளே !

திருவாளர் சாத்தானே ! 

ஜாக்கிரதை

எச்சரிக்கையாக இருங்கள்

சாம்பலிலிருந்து

என் சிவப்பு நிற தலைமுடியுடன்

நான் மீண்டும் எழுவேன்

பிறகு மனிதர்களை காற்றைப் போல

உண்டுவிடுவேன்

மூலம்  சில்வியா பிளாத்

தமிழ் மொழி  பெயர்ப்பு  தங்கேஸ்

Lady Lazarus

BY SYLVIA PLATH

I have done it again.   

One year in every ten   

I manage it——

A sort of walking miracle, my skin   

Bright as a Nazi lampshade,   

My right foot

A paperweight,

My face a featureless, fine   

Jew linen.

Peel off the napkin   

O my enemy.   

Do I terrify?——

The nose, the eye pits, the full set of teeth?   

The sour breath

Will vanish in a day.

Soon, soon the flesh

The grave cave ate will be   

At home on me

And I a smiling woman.   

I am only thirty.

And like the cat I have nine times to die.

This is Number Three.   

What a trash

To annihilate each decade.

What a million filaments.   

The peanut-crunching crowd   

Shoves in to see

Them unwrap me hand and foot——

The big strip tease.   

Gentlemen, ladies

These are my hands   

My knees.

I may be skin and bone,

Nevertheless, I am the same, identical woman.   

The first time it happened I was ten.   

It was an accident.

The second time I meant

To last it out and not come back at all.   

I rocked shut

As a seashell.

They had to call and call

And pick the worms off me like sticky pearls.

Dying

Is an art, like everything else.   

I do it exceptionally well.

I do it so it feels like hell.   

I do it so it feels real.

I guess you could say I’ve a call.

It’s easy enough to do it in a cell.

It’s easy enough to do it and stay put.   

It’s the theatrical

Comeback in broad day

To the same place, the same face, the same brute   

Amused shout:

‘A miracle!’

That knocks me out.   

There is a charge

For the eyeing of my scars, there is a charge   

For the hearing of my heart——

It really goes.

And there is a charge, a very large charge   

For a word or a touch   

Or a bit of blood

Or a piece of my hair or my clothes.   

So, so, Herr Doktor.   

So, Herr Enemy.

I am your opus,

I am your valuable,   

The pure gold baby

That melts to a shriek.   

I turn and burn.

Do not think I underestimate your great concern.

Ash, ash—

You poke and stir.

Flesh, bone, there is nothing there——

A cake of soap,   

A wedding ring,   

A gold filling.

Herr God, Herr Lucifer   

Beware

Beware.

Out of the ash

I rise with my red hair   

And I eat men like air.

இதை விருட்சம் அச்சிதழிலும் பயன் படுத்துகிறேன்.

Hide quoted text

On Thu, 19 Oct 2023, 17:57 Koodalingm Thangeswaran, <thanges1970@gmail.com> wrote:

மொழி பெயர்ப்பு 

 சில்வியா பிளாத் ( 27-10-1932-  11-02-1963  ) அமெரிக்க கவிஞர்

பிளாத் முப்பது  வயதிலேயே தன் வாழ்க்கையை தற்கொலையில் முடித்துக்  கொண்ட உலகப்புகழ் பெற்ற கவிஞர் மற்றும் நாவலசாசிரியர் ஆவார். இவரின்  Confessional poetry or “Confessionalism  ( தன்னிலை வாத கவிதைகள் – தன் வாழ்க்கையினை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட ஒப்புதல் கவிதைகள் – ஐம்பதுகளில் அமெரிக்காவின் மிக முக்கியமான கவிதை உத்தி வளர்ச்சியாகும் .மேலும் நவீனத்துவத்தின் முன்மாதிரி  Postmodernism   என்று அழைக்கப்படுகிறது. சிறு வயதிலிருந்தே தற்கொலை எண்ணம் வேரூன்றி இருந்த பிளாத் தொடர்ச்சியாக மருத்துவ மனைகளில் மனநல சிகிச்சைகள் பெற்று வந்தார். ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒரு முறை என்ற ரீதியில் தற்கொலையை அரங்கேற்றிப்பார்ப்பது இவரது வாடிக்கை .இரண்டு முறை பிழைத்துக் கொண்ட அவர் மூன்றாவது முறை  அதில் வெற்றி பெற்றிருந்தார்.அப்போது அவருக்கு வயது முப்பது மட்டுமே. அதற்குள்   Ted Hughes டெட் ஹியூஸ் என்ற அமெரிக்க கவிஞரை ( விமர்சகர் மற்றும் குழந்தைகளுக்கு கதை சொல்லி ) திருமணம் புரிந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விவகாரத்தும் பெற்று விட்டார் ( கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை கண்டதால் விவகாரத்து பெற்றார் ) ஆறு ஆண்டுகள் மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கை முறிவு பெற்ற போது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அதற்குள் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழத் தொடங்கி விட்டார்

ஆண்களின் துரோகம் சமூகத்தின் போலித்தனம் போன்றவை அவரை துயர்படுத்தின. குழந்தைகள் இரண்டும் பிளாத்தோடுதான் இருந்தன. அதிக மனஉளைச்சலுக்கு ஆளான இரவொன்றில் குழந்தைகளுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாவண்ணம் மிக பாதுகாப்பாக டேப்  துண்டுகள் உடைகளை வைத்து குழந்தைகளின் அறையை பாதுகாப்பாக  அடைத்து விட்டு  மின் அடுப்பில்  ( oven ) தலையை திணித்து தன் வாழ்வை முடித்துக் கொண்டார். 

வாழ்க்கை தந்த வெறுமைக்குப் பரிசாக அதற்கு தனது மரணத்தை தந்து மறைந்து போன பெண் கவிஞர் தான் சில்வியா பிளாத்.

கவிதை குறிப்பு 

Lady Lazarus ( கவிதை )

  பெண் லாசரஸ் என்ற இந்தக் கவிதை பிளாத்தின் கவிதைகளில் முக்கியமானதும் உலகப் புகழ்பெற்றதுமாகும்.

 பைபிளின் படி லாசரஸ் என்ற ஆண் புதைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்று இயேசு கடவுளின் மகிமையை உணர்த்துவதற்காக அவனை உயிரோடு எழுப்புகிறார்.

  ஆனால் இங்கே தன்னை பெண் லாசரஸாக தன்னை பாவித்துக் கொள்ளும் பிளாத் தன் மரணத்திலிருந்து தானே உயிர்த்தெழுந்ததாகவும் தன்னை கண்காட்சி போல் பாவித்து பார்வையிடும் இந்த உலகத்தையும் மனிதர்களையும் தான் பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து உயிர்த்து வந்தது காற்றைப் போல விழுங்கி விடுவதற்கே  என்றும் கூறுகிறார்.

  அதை விட பிளாத் இந்த கவிதைகளில் நம் மனதில் உயர்ந்து நிற்பதற்கு இன்னொரு காரணமுண்டு. அது தான் தன்னை எப்பொழுதும் பலவீனர்களோடும் அநியாயத்தால் பாதிக்கப்பட்டவோர்களோடு அடையாளம் கண்டு கொண்டு அவர்களுக்காக கவிதை வழியாக குரல் கொடுக்கும் கவித்துவ குணம்

  இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின்  வதைமுகாம்களில் நாஜிக்களின் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி யூதர்களை ஒன்றாக கொன்று குவித்து பல அபத்தமான பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தார்கள்.  அவர்களை எரித்த சாம்பலைக் கிளறி  கிளறி ஏதாவது தங்க நாணயங்கள் திருமண மோதிரங்கள் அதில் கிடைக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களினின் தோல்களை உரித்து தங்களது அலங்கார விளக்குகளுக்கு மேல் அதை ஒட்டி அழகு படுத்திக் பார்த்தார்கள். 

  இதையெல்லாம் கண்ட பிளாத் தன்னை ஒரு யூதப் பெண் என்று பகிரங்கமாக இந்தக் கவிதையில் பிரகடணப்படுத்திக் கொள்கிறார். தான் வதை முகாமில் இருப்பதாகவும் தன் சாம்பலை கிளறினால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்றும் ஆனால் தான் அவர்களுக்கு மரணத்தை பரிசளிக்க மீண்டு எழுந்து வரப்போவதாகவும் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்ல நாஜிக்களின் மருத்துவர் .பணியாளர்கள் அவர்களின் கடவுள் சாத்தான் என்று அத்தனை பேரையும் பார்த்து குற்றவாளிக்கூண்டில் நிற்க வைத்து கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்.

   மேலோட்டமாகப் பார்த்தால் தற்கொலையை கொண்டாடுவது போல் இந்தக் கவிதை தோன்றினாலும் ஆண் ஆதிக்கத்திற்கும்  அவலமான சமூகத்திற்கும் எதிர்வினையாக பெண்மையின் உணர்ச்சிக் கொந்தளிப்பான குரலாக இந்தக் கவிதை இங்கே ஒலிப்பதை காணலாம். இனி கவிதை

Lady Lazarus

BY SYLVIA PLATH

பெண் லாசரஸ்

சில்வியா பிளாத்

பத்து வருடங்களுக்கு ஒரு முறை

அதை நான் வெற்றிகரமாக

பரீட்சித்துப் பார்த்துவிடுகிறேன்

நான் ஒரு நடக்கும் அதிசயம்

நாசிக்களின் அலங்கார  விளக்காக மாறி  இருக்கிறது

எனது அங்கத்திலிருந்து உரித்தெடுக்கப்பட்ட

மேல் தொலி

என் வலது கால் 

ஒரு காகித எடை தாங்கி

களையற்ற என் முகமோ

உடல்களின் மீது போர்த்தும்..

யூதர்களின் சவத்துணி

ஓ என் எதிரியே !

என் முகத்தை போர்த்தியிருக்கும்

சவத்துணியை அகற்று

நான் உன்னை பயமுறுத்துகிறேனா ?

என் மூக்கு 

விழிகள் இருந்த இடத்தில்

இப்போது தென்படும்

கண்குழிகள்

பற்களின் முழுத் தொகுப்பு

யாவும்  யாவும் ஒரிரு நாட்களில்

காணாமல் போய்விடும்

கல்லறை குழிகள்

தின்ற என் தேகத்தின் சதைகள்

விரைவில் என்னுடன் வீட்டிலிருக்கும்

நான் ஒரு மகிழ்ச்சியான பெண் !

என் வயது முப்பது தான்

ஒரு பூனையைப் போல 

ஒன்பது முறை நான் இறக்க வேண்டும்

இது மூன்றாம் முறை தான்

ஆனாலும் என்ன  ?

குப்பை தானே இந்த வாழ்க்கை

பத்தாண்டுகளுக்கு  ஒருமுறை

அழித்து விடவேண்டியது தானே                                                                                                                                                                                                                                                   

கோடி கோடி இழைகளால்

நெய்யப்பட்டது காட்சிப்படுத்தப்பட்ட

இந்த என்  உடல் !

பாருங்கள்

இதை வேடிக்கை பார்க்க 

நெருக்கியடித்து தள்ளுகிறது  கூட்டம்

கேளிக்கையென 

வேடிக்கை பார்க்க வந்த கூட்டமே !

மரியாதைக்குரிய ஆண்களே பெண்களே !

என் ஆடையை அவிழ்த்தெறியுங்கள்

பாருங்கள் 

இது தான் என் கரங்கள்….

இது என் முழங்கால்…

இது என் எலும்புகள் இது என் தோல்

எல்லாம் சேர்த்தது தான் நான்

நான் ஒரு பெண்  

பழைய அதே பெண்

அது முதல் முறை நடந்த போது

அது ஒரு விபத்து

அப்போது  எனக்குப் பத்து வயது

இரண்டாம் முறை அது நடந்த போது

அதை நீட்டிக்கவே விரும்பினேன்

அதனிடமிருந்து திரும்பி வரவே மனதில்லை

ஒரு சிப்பியைப்போல 

பலவந்தமாய் அதில் என்னை மூடிக்கொண்டேன்.

அவர்கள் என்னை 

அழைத்துக் கொண்டே இருந்தார்கள்

சிப்பியில்

ஒட்டிக்கொண்ட முத்துக்களை 

பிய்த்தெடுப்பதைப்போல

என் உடலில் இருந்து புழுக்களைப் 

பிய்த்தெடுத்தார்கள்

யாவற்றையும் போல 

இறப்பும் ஒருகலையே ! 

அதை நான் மிக அற்புதமாக 

அரங்கேற்றினேன்

நான் ஏன் அவ்விதம் செய்தேன் ?

ஏனென்றால் இங்கே நான் 

நரகம் போல் உணர்ந்தேன்

நான் ஏன் அவ்விதம் செய்தேன் ?

ஏனென்றால்

அதை உண்மையென உணர்ந்தேன்

எனக்கொரு அழைப்பு வந்திருக்குமென்று

நீங்கள் யூகிக்கலாம்

ஒரு அறையில் அமர்ந்து கொண்டு

இதை நிறைவேற்றுவது எளிது 

நிறைவேற்றி விட்டு 

அமர்ந்திருப்பது அதனினும் எளிது

மறுபடியும் அரங்கேறும் காட்சிகள்

விடியல் வெளிச்சத்தில்

அதே இடம் அதே முகம்

அதே விலங்குகள்

அதே கூச்சல்

அது அதிசயம் தான்

ஆனால் கட்டற்ற கூச்சல் தான் 

என்னை சாய்க்கிறது

வாருங்கள் இறந்து மீண்டவளை பார்வையிட!

ஆனால் பார்வையிட ஒரு கட்டணமுண்டு

ஒவ்வொரு அங்கத்திற்கும் 

ஒரு பிரத்யேக கட்டணம்

முதலில் வடுக்களுக்கு , 

பிறகு இதயத்தின் துடிப்போசைகளை

கேட்பதற்கு

ஒரு வார்த்தைக்கு

ஒரு தொடலுக்கு

என்னுடைய ஒரு துளி ரத்தத்தை தொடுவதற்கும்

மிகப்பெரும் கட்டணமுண்டு

வாருங்கள் கட்டணமுண்டு

என்னுடைய ஒற்றை தலைமுடிக்கு

உடைகளுக்கு

மிகப்பெரும் கட்டணமுண்டு

ஆகையால்

திரு மருத்துவர் அவர்களே !

திரு எதிரி அவர்களே !

இன்று நான் உங்கள் இசை விருந்து 

இன்று நான் உங்களுக்கு

ஒரு விலைமதிப்பற்ற பொருள்

ஒரு தங்க குழந்தை

ஒரு அலறுக்கு உருகிப்போவேன்

என்னை நானே  மீண்டும் எரிப்பேன்

ஆனால் நானே

மரியாதைக்குரியவர்களே !

என்னுடல் மீதான 

உங்கள் அக்கறையை 

ஒரு போதும் குறைத்து மதிப்பிடுவேன்

என்று எண்ணாதீர்கள்

என்னுடைய சாம்பலை என்ன செய்வாய் ?

சாம்பலை என்ன செய்வாய் ?

குச்சியால் கிளறிப்பார்ப்பாய்

தசைகள் எலும்புகள் எலும்புகள்

வேறேதும் இல்லை அங்கே

ஒரு கேக் சோப்

ஒரு திருமண மோதிரம்

சில தங்க துணுக்குகள்

வேறேதும் இல்லை

திருவாளர் கடவுளே !

திருவாளர் சாத்தானே ! 

ஜாக்கிரதை

எச்சரிக்கையாக இருங்கள்

சாம்பலிலிருந்து

என் சிவப்பு நிற தலைமுடியுடன்

நான் மீண்டும் எழுவேன்

பிறகு மனிதர்களை காற்றைப் போல

உண்டுவிடுவேன்

மூலம்  சில்வியா பிளாத்

தமிழ் மொழி  பெயர்ப்பு  தங்கேஸ்

Lady Lazarus

BY SYLVIA PLATH

I have done it again.   

One year in every ten   

I manage it——

A sort of walking miracle, my skin   

Bright as a Nazi lampshade,   

My right foot

A paperweight,

My face a featureless, fine   

Jew linen.

Peel off the napkin   

O my enemy.   

Do I terrify?——

The nose, the eye pits, the full set of teeth?   

The sour breath

Will vanish in a day.

Soon, soon the flesh

The grave cave ate will be   

At home on me

And I a smiling woman.   

I am only thirty.

And like the cat I have nine times to die.

This is Number Three.   

What a trash

To annihilate each decade.

What a million filaments.   

The peanut-crunching crowd   

Shoves in to see

Them unwrap me hand and foot——

The big strip tease.   

Gentlemen, ladies

These are my hands   

My knees.

I may be skin and bone,

Nevertheless, I am the same, identical woman.   

The first time it happened I was ten.   

It was an accident.

The second time I meant

To last it out and not come back at all.   

I rocked shut

As a seashell.

They had to call and call

And pick the worms off me like sticky pearls.

Dying

Is an art, like everything else.   

I do it exceptionally well.

I do it so it feels like hell.   

I do it so it feels real.

I guess you could say I’ve a call.

It’s easy enough to do it in a cell.

It’s easy enough to do it and stay put.   

It’s the theatrical

Comeback in broad day

To the same place, the same face, the same brute   

Amused shout:

‘A miracle!’

That knocks me out.   

There is a charge

For the eyeing of my scars, there is a charge   

For the hearing of my heart——

It really goes.

And there is a charge, a very large charge   

For a word or a touch   

Or a bit of blood

Or a piece of my hair or my clothes.   

So, so, Herr Doktor.   

So, Herr Enemy.

I am your opus,

I am your valuable,   

The pure gold baby

That melts to a shriek.   

I turn and burn.

Do not think I underestimate your great concern.

Ash, ash—

You poke and stir.

Flesh, bone, there is nothing there——

A cake of soap,   

A wedding ring,   

A gold filling.

Herr God, Herr Lucifer   

Beware

Beware.

Out of the ash

I rise with my red hair   

And I eat men like air.