வயோதிகம் ஒரு இன்பம்.
வயது ஒரு எண் மாத்திரம்..
மயங்காதே அந்த சொல் கேட்டு ….
ஏங்காதே சென்ற இளமை நினைத்து..
வயதானால் என்ன!
முதுமை எத்துணை இன்பம்!
மும்மாரி பொழியும் மழை போல்
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை
வங்கியில் வட்டிப்பணம்; சேர்ந்தவாறு..
ஓயா அருவி என
மாதாந்திர ஓய்வூதியம்.
இ எம் ஐ கவலையில்லை.
இன்னுமொரு காபி
அருந்த தயக்கமில்லை.
நலம் விசாரிக்கும் உறவுகள்.
உகந்த நேரம் கேட்டு,
வரும் இதமான விருந்து.
பார்வையாய் உடுத்த வேண்டாம்.
பரபரப்பாய் இயங்கவேண்டாம்
ஆற அமர செய்திதாள் வாசித்து,
குறுக்கெழுத்து போடலாம்.
கிரிக்கெட் மேட்ச்,
தொலைகாட்சி திரைப்படம்.
மதிய நேர தூக்கம்.
மாலை நேர நடை.
இடையிடையே செல்பேசி பேச்சு.. மேய்ச்சல்.
என்னம்மா வேண்டும் கேட்கும் மக்கள் .. பெருமிதம்!
ஒன்றும் வேண்டாம்
என்பதில் பெருமை!
இதுவன்றோ வாழ்வு!
முதுமை இனிமை; இனிமையே!
சசிகலா விஸ்வநாதன்
30-10-2023