35வது இணையகாலக் கவியரங்கம்
உயிர்ப்பு .
___
கற்பனைகள் நிறைந்திருக்கும் உலகில்
முட்டினால் கொம்பு முளைக்கும்
மயிலிறகு குட்டி போடும்
பொய் பேசினால் சாமி
கண்ணைக் குத்தும்
நிலவில் வடை சுடும் பாட்டி
இன்னும் எத்தனையோ…
ஏனென்று கேட்காமல்
ஆமென்று ஒத்துக்கொண்ட
சிறுவயது கற்பிதங்கள்
தேடித்தேடி யோசிக்கையில்
உயிரில்லாப் பொழுதுகளை
உயிர்ப்பித்து விடுகிறது சஞ்சீவினியாய்…
.
சிறப்பான நினைவுகள்
நன்றி.