வசந்ததீபன்
இரவை ஆடையாகபூண்ட
நிழல்
கனவுகளின் சாலை வழியாக போகையில்
எதிர்பட்ட
வாகனவிளக்குகளால்
தூக்கி எறியப்பட்டு
காயம்பட்டு
துடித்துக் கதறிய பொழுது
மரங்கள் நடுங்கியே
புலம்புகையில்
மெல்லிய காற்றின் தழுவலில்
பறவைகள் தாலாட்டில்
கிழக்கிலிருந்து வருகிறாள்
நிலா
பனிக்கைகளால்
மருந்திட்டு சுகமாக்க.
