களி கொள் நெஞ்சமே

வசந்ததீபன்

இரவை ஆடையாகபூண்ட

நிழல் 

கனவுகளின் சாலை வழியாக போகையில்

எதிர்பட்ட

வாகனவிளக்குகளால் 

தூக்கி எறியப்பட்டு

காயம்பட்டு

துடித்துக் கதறிய பொழுது

மரங்கள் நடுங்கியே 

புலம்புகையில் 

மெல்லிய காற்றின் தழுவலில் 

பறவைகள் தாலாட்டில்

கிழக்கிலிருந்து வருகிறாள் 

நிலா

பனிக்கைகளால்

மருந்திட்டு சுகமாக்க.