51வது இணையகாலக் கவியரங்கம்.
மழையில் நனைந்த புத்தகங்களை
தொடும் போதெல்லாம் மெலிதாய்
நடுக்கம் பீடித்துக் கொள்கிறது
பிறந்த குழந்தையை தூக்கும்
லாவகத்தை விரல்கள் கைகொண்டு
மிருதுவாகி விடுகின்றன.
உலர்ந்த பின்னும்
ஒன்றோடொன்று ஒட்டிக்கிடக்கும்
பக்கங்களை ஊதிப் பிரிக்கையில் நெஞ்சுக்கூடு தவித்துப் போகிறது
காப்பாற்றப்பட்ட ஆசுவாசத்தில்
மொடமொடத்து பருத்துக் கிடக்கும்
புத்தகப் பக்கங்களில்
தேடித் தேடிப் பார்த்தாலும்
பழகிய வாசனை மட்டும்
இல்லவேயில்லை.
.
👏👏👌