இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
எட்டா இலக்கணத் தமிழை
எளியேனும் கட்டித் தேன்
பாகு என சுவைத்திட அருளிய
எட்டையபுர கவிஞனுக்கு;
தமிழை பிழையில்லாமல்
படிக்கவும் எழுதவும்
எளிதான பயிற்சிக்களம் அமைத்த அரும் பெரும் கவிஞனுக்கு;
மனப்பாட பயிற்சி செய்யும் மாணாக்கருக்கு ஆடுகளம்
அமைத்து கொடுத்து
எந்த கருப்பொருளும்
பா ஆக்க உகந்ததே
என்பதை கண்ணன்பாட்டு,
கிளிப்பாட்டு, குயில் பாட்டு,
விடுதலைப்பாட்டு ஈராக
பாஞ்சாலி சபதம் வரை;
வித்தகம் காட்டிய ஆசானுக்கு
தமிழ் பயில் மாணவியென
என்றும் எளிய தமிழ் பயிலும்
என் தாழ்வான வணக்கம்.
11-12-23