சசிகலா விஸ்வநாதன்/குடியின் கொடுமை


உண்மை சுடும்

ஏனடா; இப்படி குடிக்கிறாய்… எப்போதிலிருந்து இது உன்னை தொற்றியது?

வேடிக்கை பதில்!
அதில் உண்மையும் உண்டு

தெரியலை அம்மா!
பொறந்ததிலேர்ந்து!
என்றான்.

என்னடா!
திடுக்கிட
போதுமணி அம்மா..
அவன் அம்மாதான்
சொன்னாள்
கரீட்டுதான்.

அவன் அப்பன் ஒரு குடிகார பய
வீடு அடையவே மாட்டான்.
நான் சித்தாள் வேலைக்கு போணுமில்ல;
என்ன செய்வேன்?

அப்பப்ப ஒரு சங்கு ஊத்தி விடுவேன்.
பாலுக்கும் அளுவாது
பசிக்கும் கத்தாது.
இன்னா செய்ய?

நல்ல சமுசாரிபொண்ணா
பார்த்து கட்டி வைச்சேன்
மகராசி!
சுதாரிப்பா இருக்கா,
குழந்தை குட்டி ஏதுமில்லை.
இவனை நல்லா வைச்சுருக்கா.

ஆசுபத்திரியில் சேர்த்து மொத்தமாக இல்லாக் காட்டியும்
குடி முக்காலும் போயிடுச்சு.
இனி பிளைச்சுக்கிடுவான்.

நான் செய்ய கையாலாகாததை
அவ செஞ்சுட்டா.
மகமாயி அவ நல்லா இருந்துக்கிடணும்.


14-12-2023