சுரேஷ் ராஜகோபால்/பூப் ..பூவா பூத்திருக்கு

சொல் புதிது, இணைய கால, 66வது கவி அரங்கம், தேதி 24.12 2023 கிழமை ஞாயிறு , நேரம் மாலை 05.20 ..

என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
#பூ…பூவா பூத்திருக்கு

பூ…பூவா
பூத்திருக்கு
மனசுக்குள்ள.
பூர்ணமா
நிறைஞ்சிருக்கு
மகிழ்ச்சி துள்ள.
புன்னகையில்
புத்துணர்வு
பிறந்திடுச்சி.
புது கற்பனைகள்
அகமெல்லாம்
படர்ந்திருச்சி.
பட்டாடை
வாசமது
உன்நினைப்பு.
பௌர்ணமி
முழு நிலவே நீயே
பூலோக
ரம்பையடி நீயே
நின் வரவு
குதூகுலம்
பொங்குதடியே.

சுரேஷ் ராஜகோபால்.
சிட்லபாக்கம்
24/12/2023 மாலை 05.20