
சொல் புதிது, இணைய கால, 78வது கவி அரங்கம், தேதி 04.01 2024 கிழமை வியாழன், நேரம் மாலை 05.10,” களைப்புக்கு வடிகால் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
காலை முதல் கடுமையான
வேலை தொடர்ந்து தொய்வில்லாமல்
இதுநடுவே ஓய்வும் உணவும்
மறந்தே போச்சு .
வண்டியை ஓரம் கட்டி
தேநீர்க் கடையில் காக்கக்
களைப்பில் நானும்
மிதர்ப்பில் (தேநீர்) வடிகட்டியும் நின்றோம்.
சூடு பறக்கத் தேநீர் வந்தது
தொண்டையில் இறங்கும் போது
இதமாக இருந்தது
களைப்புக்கு வடிகால் கிடைத்தது.
சிட்லபாக்கம்
04 01 2024 மாலை 05.10

Last line very super