
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
செவ்வாய்க்கிழமை
மாலை மணி 5.15
அழகிய சிங்கரின் என்பா சரமாக
கவிதையின் தலைப்பு
நினையாத நாளில்
அறியாத நாழிகையில்
புரியாத மொழியில்
கூறிவிட்டாய் நீ;
திடுக்கிட்டு, நான்
திகைப்பை விலக்கி
நாணம் கொண்டு நானும்.
நாணம் கொண்ட
என் கண்ணை,
நேர் கொண்டு நீ பார்த்து;
என்ன தேடினாய்?
தேடிய பொருள்
கிடைத்ததா;உனக்கு என்னிடம்?
என் கண்ணில் கண்டதை நீ
விண்டுரைப்பாய் என நானும்; நான்
விளம்பிடுவேனென
நீயும்; நீண்ட பொழுது
காத்திருந்தோம்; பொழுதுதான் போனது.
போன பொழுதை பொத்தி வைத்தேன்.
நினைவில், இன்பமாய், இன்று வரை;
திளைக்கிறேன்; இன்னும் புரியவில்லை;என்
கண்ணில் என்ன பார்த்தாய்?
உன் கண் சிரித்ததை, நான்
புரிந்து கொண்டேன்.
புரிந்து கொண்டாய்;
நீயும்,என் மனதின் மலர்வை,
இதுதான் காதல் என்பதோ?
இன்றுவரை உன்
கண் பார்த்து
நானும்; என் கண் பார்த்து
நீயும்; காணும் பிழை இன்றி
கருத்துப் பிழையும் இன்றி,
சேர்ந்து வாழ்தலின் சுவை அறிந்து;
அவரவர் போக்கின் புரிதலை காத்து;
மதித்து நடக்கும் கலை தெளிந்து;
நம் தேறல் நன்றே.
23-1-2024
