ரேவதி பாலு/சொடுக்கு கதைகள்

  1. இசை புதிது குழுவின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிக்கு பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, “இப்போது தான் 500 வருஷம் கழித்து ராமர் வந்து இருக்காரு. நீ பாடி அவரை திருப்பிஅனுப்பி விடாதே” என்றான் மகன் அன்புடன்.
  2. ” எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்” என்றான் மகன்.
    பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தோம்,
    நானும் என் கணவரும்.
    “ரெண்டு பேர் கையிலயும் மொபைல் இல்ல . இது நம்ம வீடு தானா?”