புவனா சந்திரசேகரன்/கூழாங்கல் நினைவுகள்

99 ஆவது இணைய காலக் கவியரங்கம்

கூழாங்கல் நினைவுகள்
தண்ணீரில் கரையாமல்
தவமிருக்கும் துறவிகள்!

தவிப்புடன் காத்திருக்கும்
கருவறைக் குழவிகள்!

ஆழத்தில் கிடந்தாலும்
அசையத் தான் ஆசை!

கூழாங்கல் நினைவுகள்
என்றேனும் நாவேறும்
கற்கண்டுகளாக!