அழகியசிங்கர்/கவிதை எழுதுபவர்கள்

கவிதை எழுதுபவர்கள்
கடவுளுக்கு சமம்
ஆனால்
கவிதை எழுதுபவருக்குத்
தெரியாது

அவர்கள் தங்கள்
கவிதைகளைப் யாரும் படிக்கவில்லை
என்று மற்றவர்களுடன்
சண்டைப் போடுகிறார்கள்

அவர்களுக்குப்
புரியாத புதிர்
அவர் கவிதைகளை
எழுதியவுடன்
ஒருவர் படித்து விடுகிறாரென்று