புவனா சந்திரசேகரன்/வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை

அழகிய சிங்கரின் என்பா

  1. கனவுகளை வானில் விண்மீன்களாக்கி அனுப்பினேன்!
    உதிரும் நாளுக்காகக் காத்து நின்றேன்!
    வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
    கனவுகள் மீண்டுமெனை அழைக்கின்றன!
  2. முயற்சிகள் செய்தால் முடிவுகள் இனிமை!
    வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை!
    உழைப்பின் பெருமையை உணர்ந்தேன் இன்று!
    போராட நானும் துணிந்துவிட்டேன்!

3.வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
காத்திருக்கும் எனக்கும்
உண்மை புரிவதில்லை
கற்பனைக் கதைகளைக் கேட்டே வளர்ந்ததனால்
வாழ்வின் யதார்த்தம் சுடுகிறது!