ஷண்முக சுப்பையா/அறிஞர்கள்

நேற்றுவரை
இருப்பது போல்
இருந்து வந்தான்.
இன்றவன்
இல்லவேயில்லை.

”மகராசன் ! ஐயோ !
போய் மறைந் தான்’
என அவனை
அறியாதாரும்
தவியாய்
தவிக்கின்றார்.

இன்றுவரை
இல்லாதது போல்
இருந்து வருகின்றேன்.
நேற்று நான்
இல்லவேயில்லை.
“நடைப்பிணம்! சீச்சீ!
நடமாடித் திரிகின்றான்”
என என்னை
அறிந்தோறும்
நகையாய்
நகைக்கின்றார்.