அழகியசிங்கர்/

மறந்து போன பக்கங்கள்….

தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஆறாவது கவிதை பழம்பெருமை. நெளிந்தது புழு என்று ஏன சொல்கிறார்? குலப்பெருமை பேசி என்ன பயன் என்கிறாரா? ஒரு புதுக்கவிதையைப் படிக்க படிக்க பலவிதமாக யோசனை செய்துகொண்டே இருக்கலாம். ஆனால் இப்படி நினைப்பதுதான் இறுதி என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை.

பழம்பெருமை

குழம்பு மாங்கொட்டை

குலப் பெருமை பேசிற்று;

நட்டுவைத்துக்

காத்திருந்தேன்;

நெடுமரமும் மரக்கனியும்

நிழலாச்சு !

நெளிந்தது

புழு!