அழகியசிங்கர்/சொடுக்குக் கதைகள்

  1. வழக்கம் போல கல்யாண மண்டபத்துக்கு வந்த அவர், சேரில் உட்கார்ந்திருக்கும் போதே தூங்கி வழிந்தார்.
  2. மனிதர்கள் தெருவில் நடந்து போகிறார்கள். அவனும் அவர்களில் ஒருவன்
  3. எல்லோருக்கும் புரிந்தது. அவருக்குப்புரியவில்லை. ஒன்றும் செய்ய முடியாது
  4. கையில் காசு இருந்தால் எல்லோரும் வருவார்கள். காசு இல்லாவிட்டால் யாரும் சீந்த மாட்டார்கள்
  5. புத்தக வெளியீட்டுக் கூட்டத்திற்கு அவன் வந்திருந்தான்.புத்தகம் பற்றி எல்லோரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.காபி, டிபன் கொடுத்தார்கள். புத்தகம் பரிசுப் பொருளாகக் கொடுக்கவில்லை.