அன்னபூரணி தண்டபாணி

சொடுக்கு கதைகள்:

  1. புத்தக்காட்சிக்குப் போயிருந்தேன்.. நல்ல கூட்டம். உணவகங்களில்..
  2. தினமும் அவள்தான் முதலில் எழுந்திருக்கிறாள். ஆனால் முதலில் அவள் சாப்பிடுவதுமில்லை, தூங்குவதுமில்லை.
  3. நாள் முழுதும் ஓயாமல் வேலை செய்கிறாள். ஆனாலும் அவளைப் பார்த்து எல்லாரும் சொல்வதென்னவோ, வீட்டில் சும்மாதான் இருக்கிறாள்.
  4. அவள் முடியாது முடியாது என்று அலறினாலும் விடாமல் துரத்ததுகிறது வீட்டு வேலைகள்.
  5. நீ பாதி நான் பாதி என்றான். நம்பி ஏமாந்தாள். சாப்பிடுவது அவன் வேலையாம்; பாத்திரம் கழுவுவது அவள் வேலையாம்! அப்போ சமைப்பது?!?!