கல்யாண்ஜி கவிதை

இன்று ஒரே ஒரு
சிட்டுக் குருவியையாவது
பார்த்து விட வேண்டும்.
ஒரு கூட்டையாவது
ஒரு வைக்கோல் துரும்பையாவது
ஒரு புழுவையாவது
ஒரு தானியத்தையாவது.
எதுவும் வசப்படவில்லையெனில்
எப்போதும் போல
வானத்தையாவது.

2021