தஞ்சாவூர் ஹரணி கவிதை

நவீன விருட்சம் – திரு அழகிய சிங்கர் நடத்தும்
இணையக் காலக் கவியரங்கம் 16 நாள் – 20.3.2024

000

ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு
எல்லோருக்கும் வரமுண்டு
வகையாக வாழ்வதற்கு
ஒரு சிலருக்கே திறமுண்டு…

விடிந்தாலும் விடியாது சிலருக்கு
மடிந்தாலும் விதிமுடிவு மாறாது
இருளுக்குள்ளே மின்மினியாய்
வாழும் பேரும் இங்கேயுண்டு…

தேடித்தேடி அலைவதெல்லாம்
வாழ்க்கை என்ற பெயரிலுண்டு
அலையாமல் தேடி வாழ்வதே
வாழ்க்கை என்றும் சொல்வதுண்டு

வாழும் வகைதெரிந்து வாழ்ந்துவிடு
வாழும்போதே சிறக்கச் செத்துவிடு.