சசிகலா விஸ்வநாதன்/உலகக் கவிதை தினம்

ஒரு கனவு,ஒரு நினைவு,
ஒரு சொல்,ஒரு அகலின்
ஒளி,பொறி பற்றிக்
கனலாய் ஓங்க;
அனல் ஒரு கவிதைப்
புனலாய் மாறும் விந்தை;
சிந்தை முற்றும் செந்தமிழ்
சந்தம் விளையாட,
சப்தம் இன்றி ஒரு பா.