நான் இப்போது டிரெயினில்
போகிறேன்
மாம்பலத்திலிருந்து
தாம்பரம் வரை
ஒரே சத்தம்
கெட்ட வார்த்தைகளில்
பேசிக் கொள்கிறார்கள்!
மற்றவர்களுக்குத்
தொந்தரவு என்று
தெரியவில்லை.
ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு வந்தேன்
ஆனால் ஏனோ எடுத்துப்படிக்கவில்லை!
ரொம்ப வருஷம்
கழித்து வருகிறேன்
ஒரு பிச்சைக்காரி
வயிற்று ரணத்தைக்
காட்டியபடி வருகிறாள்
கண்ணை மூடியபடி
காசு போட்டேன்
இன்னொருத்தி
சுண்டல் விற்றபடி
வருகிறாள்
இதோ தாம்பரத்தை
நெருங்குகிறது
முதலில்
தாம்பரம் வந்தவுடன்
ஒரு இடத்தைத் தேடி
இந்தக் கவிதையைப்
படிக்க வேண்டும்