சுரேஷ் ராஜகோபால், /”அன்பு ஒரு விதை”

அன்பு ஒரு விதை
நட்டு வைத்தால்
செடியாகக்
கொடியாக
மரமாகப்
பெருகி வளரும். 1

எங்கே அன்பு
ஆழமாக விதைக்கப் படுகிறதோ
அங்கே கண்ணீர்
நிச்சயம் அடைமழையாகப்
பெய்திடக் காத்திருக்கும்
எதிர் பார்த்திருக்கும். 2