சசிகலா விஸ்வநாதன்/இறையின் இருப்பு

பெருத்த சினை வயிறு சரிவுடன்,
மேல் மூச்சும்,கீழ் மூச்சுமாக;
தளர்நடையில்
உயர்ந்த குன்றேறிய;
பசு கண்டது
பெரும் பாலையும் கானல் நீரையும் மட்டும்;
மருண்டது;
தேடியது நன்னீரை.
கானல் சூழலில் சிக்காமல்,
பாலைவனச் சோலை
ஒன்று கண்டு
தன் கருச் சுமையை
இறக்கி, ஆறுதல் அடைய;
இறை தன் இருப்பைச் சுட்டியது.