எங்கள் வீட்டு
நாய்க்குட்டி
சேற்றில்
புரண்டு வந்தது
அதைக் குளிப்பாட்டினேன்.
எங்கள் வீட்டுப்
பூனைக்குட்டி
அணிலைப் பிடித்துத் தின்று வாயில்
குருதிக் கறையுடன் வந்தது. கையிலெடுத்துத்
துடைத்துவிட்டேன்.
எங்கள் வீட்டு
மல்லிகைக் கொடி நேற்றடித்த
காற்றில் அலைபாய்ந்தாட
அதற்கொரு
கொழுகொம்பு நட்டேன்.
என் கடைசிப்பையன்
கந்தகுமாரன் கபடி ஆடிவிட்டுக்
கால்முட்டியில்
ரத்ததுடன் வருகையில் காயம் துடைத்து
மருந்திட்டேன்.
ஆமாம்.
எனக்கு எல்லாமே ஒன்றுதான்
மனதை இதமாக வருடிய வரிகள்.
மிக்க நன்றி.