சாருநிவேதிதா

நானும் எத்தனை காலத்துக்குத்தான் என் பயோடேட்டாவையே தூக்கிக் கொண்டு அலைவது, சொல்லுங்கள்? எனக்கும் அலுப்பாக இருக்காதா? உலகத்தில் அவன் அவன் ஒரே ஒரு நாவசாருநிவேதிதாலை எழுதி விட்டு வாழ்நாள் பூராவும் மஜா பண்ணிக் கொண்டு திரிகிறான். நான் அ-புனைவில் நூறு நூல்கள் எழுதியிருக்கிறேன். நாவல்கள் ஆறு. அதில் எக்ஸைலும், ராஸ லீலாவும் மட்டுமே நாலைந்து நாவல்களுக்கு சமம். இப்போது ஔரங்ஸேப் 2000 பக்கம். அருந்ததி ராய் ஒரே ஒரு நாவலை எழுதி விட்டு உலகம் பூராவும் சுற்றிக் கொண்டு இல்லையா? தமிழ் எழுத்தாளன் மட்டும் வாழ்நாள் பூராவும் செக்கு இழுத்துக் கொண்டே இருக்க வேண்டுமா?