வளவ. துரையன்/எனக்கில்லை

மத்திய சிறைக்குள்ளே
நுழைவதென்றாலே
மனத்தில் ஓர் அச்சம்தான்
மாறாத ஒரு நடுக்கம்தான்

நான்கைந்து தடுப்பு வாசல்களிலும்
நல்லமுறைச்
சோதனைகள்.

கோரிக்கைகளை
வென்றெடுக்க ஆசிரியர் போராட்டத்தில்
அடியேனும் கலந்து கொண்டு
அங்கிருந்த நாள்கள் அசைபோட வந்தன.

இப்பொழுதும் எதுவும் மாறவில்லை.
பார்வையாளர் சந்திக்குமிடம்
அதிகாரிகளின்
அலுவலகங்கள்
மிடுக்கான காவலர்கள்
வானளாவிய சுற்றுச் சுவர்
கண்காணிப்பாளர்
இனிமையுடன் பேசினார்.

இனிப்பும் தேநீரும் பிஸ்கட்டுகளும் வந்தன.
நல்ல உபசரிப்பு
எல்லாமே எனக்கில்லை. நான் அன்பளிப்பாக
அளித்த நூல்களுக்கே.