ஜெயஸ்ரீ ரகுராமன்/உபதேசம்

கவலையில் நான் மூழ்கியிருந்தேன்.
எதற்கும் கவலைப்படாதே
எல்லாம் நன்மைக்கே என்று நினை
நேர்மறை எண்ணங்களே கொள்
எல்லாம் இறைவன் செயல்
ஏதோ ஒரு காரணத்திற்காக
இவற்றையெல்லாம் இறைவனே நடத்துகிறார்
என்று நினை… தொடர்ந்தன அறிவுரைகள்
ஆம்… இவற்றையெல்லாம் பின்பற்ற ஆரம்பித்தேன்
உற்சாகமாய் இருந்தேன்
கவலைகளை ஆழ் மனதில் புதைத்து
இப்போது என் பின்னால் பேசுகின்றனர்
எப்படித்தான் இவளால் இப்படி
திண்ணக்கமாய் இருக்க முடிகிறதோ என்று.