மதுவந்தி/மேடை தாண்டிய நாடகம்.

இருப்பது இரு இட்லிதான்
எனத் தெரிந்து
பசியேயில்லையென
சிரித்த முகத்துடன்
சொல்லி தம்பிக்கு
கொடுத்த போதே
நடிப்பு ஆரம்பம்.

இது போல நாடகம் எல்லா வீடுகளிலும்
நிகழ்ந்து கொண்டே
இருக்கின்றன
மேடையில் தவிர
மற்ற இடங்களிலும்,
ஒப்பனையின்றி
ஒத்திகையின்றி…

(27.03.24 உலக நாடக தினம்.)