அதிரன்/வலி

ஜன்னல் ஓரம் புதிதாக வாங்கி வைக்கப்பட்டிருந்த
வண்ண மீன் தொட்டியை
வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி
தீடிரென பாட்டியை நோக்கி ஒடினாள்
” என்னை போல அந்த
மீன்களுக்கும் அம்மா இல்லையா பாட்டி?”
ஏன் தொட்டிக்குள் இருக்கும் எல்லா
மீன்களும் “அம்மா” “அம்மா” என்பது போல்
வாயசைக்கின்றன??
“வேனும்னா இந்த தொட்டிய வாங்கின கடையிலேயே திருப்பி கொடுத்திடலாமா பாட்டி ?” என்று கேட்டுக் கொண்டே வந்து
மடியில் அமர்ந்த
பேத்திக்கு பதில் சொல்ல முடியாமல்
ஆறத் தழுவி கொண்டாள்
“எல்லாம் காலைலே பார்த்துப்போம்
இப்ப தூங்கிட செல்லம்” என்று பேத்தியை மடியில் கிடத்தி தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்
அப்பொழுது “ஆமாம்” என்பது போல
சுவர் கடிகாரம் ஒன்பது முறை மணி அடித்து இரவை வரவேற்றுக் கொண்டிருந்தது


  • 30.03.2024
    மணி 16. 14