வெங்கடேஸ்வரா போளி ஸ்டால்

அழகியசிங்கர்

இப்போதெல்லாம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கே போவதில்லை. ஆனா அந்தத் தெரு வழியாகப் போனா அந்தக் கடையை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே போவேன்.

ஒருநாள் அந்த வழியாகப் போனேன். இப்போதெல்லாம் தொற்றுக்கு யாரும் பயப்படுவதில்லை. ஒரே கூட்டம். அப்படியே படம் பிடித்து நார் நாராய் கிழித்து முகநூலில் எழுதலாமென்று நினைத்தேன்.

ஆனால் கடை வாசலில் நின்றுகொண்டு போண்டாவைத் தின்று கொண்டிருக்கும் எனக்குத் தெரிந்த பெண்மணியைப் பார்த்து வண்டியை எங்கும் நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டு வந்து விட்டேன் தலையில் அடித்தபடி.