அழகியசிங்கர்
ஒவ்வொரு நாளும் பல பதிவுகளை உண்டாக்கியபடியே விருட்சம் டெய்லி போய்க் கொண்டிருக்கிறது. படிக்கும்போது வியப்பாக இருக்கும்.
இன்று சி.சு செல்லப்பாவின் பிறந்த தினம். மணிக்கொடி எழுத்தாளர். 1960ஆம் ஆண்டில் அவர் ‘எழுத்து’ என்ற சிற்றேட்டை ஆரம்பித்தார்.
முக்கியமான இரண்டு விஷயங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது எழுத்து. ஒன்று புதுக் கவிதை. இரண்டாவது அலசல் முறை விமர்சனம்.
எழுத்து பத்திரிகைக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு.
அவரை சிறுபத்திரிகையின் பிதாமகர் என்று அழைக்க விரும்புகிறேன். முழு மூச்சாக ஒரு படைப்பாளியாக வாழ்ந்து காட்டியவர்.
அவருடன் பழகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என் கொடுப்பினை என்று நினைக்கிறேன்.
சி சு செல்லப்பாவிற்கு வீர வணக்கங்கள்.