வைதேகி/அழகு

25வது இணையகாலக் கவியரங்கம்


கொளுத்தும் மதிய வெயில்
நெரிசலானப் பேருந்து
நின்றபடி பயணம்
வியர்வைக் கசகசப்பு
அசைய மறந்த மரங்கள்
எரிச்சலான மனநிலை
இவையனைத்தும் நொடிப்பொழுதில்
அழகாகி விடுகிறது
அம்மாவின் தோளில் சாய்ந்தபடி
என்னை நோக்கி சிரிக்கும் குழந்தை.

.