வளவ. துரையன்/பார்வை

29-3-24 இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை

மேகங்களின் உருவங்கள் காற்றால் மாறுவதைப் போல மெதுவாக இங்கே இரக்கமின்றிச் செல்கிறது காலம்.

அன்று
முதல் பார்வையில் நீ
தந்த குளிர்மொழிதான்
மனகுகையில்
உட்கார்ந்துகொண்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

நினைது நினைது
மறக்க முயல்கிறேன்.

நினைவுகளைப் போட்டுக் கசக்கிப் பிழிந்துக் கரும்பரைக்கும் இயந்திரமாக மனம் கசப்பு கொள்கிறது.

எல்லாம் காலியானாலும்
சமையல் பாத்திரத்தின் அடியில் ஒட்டியிருக்கும் சோற்றுப் பருக்கையாய் நீ
அமர்ந்து கொண்டிருக்கிறாய்.

அதனால்
பசியாறாது
என்று தெரிந்திருந்தும்
அதையே ஏக்கத்துடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
,–++—+++++++++