சுரேஷ் ராஜகோபால்/முதல் சிலை

விருட்சம் சொல் புதிது வழங்கும் இணைய கால 25வது கவியரங்கம், நாள் 29 03 2024 கிழமை வெள்ளி நேரம் மாலை 05.10 “முதல் சிலை ” என்ற எனது கவிதையை படிப்பது சுரேஷ் ராஜகோபால், சிட்லபாக்கம், சென்னை.

சிற்பி செதுக்கிய
முதல் சிலையில் திருப்தியில்லை
மறுபடி செய்த
அற்புதச் சிலை
கோவிலில் அலங்கரிக்க
முதல் சிலை அநாதையாகத்
தங்கி விட்டது அப்போது
சிற்பி மறைந்த நூறாண்டுக்கு பின்னே
யாரோ சிலரின்
பராமரிப்பில் இப்போது
உயிர் பெற்றது
புதுக்கோவிலில் அலங்கரிக்க
காட்சி தந்தது
பூசை பெற்றது.


சிட்லபாக்கம்,
29 03 2024 மாலை 05.10