இனிய மாலை வணக்கம்
இணைய கால கவியரங்கம்
சனிக்கிழமை
கவிதையின் தலைப்பு
நாளும் ஒரு முகமூடி
நான் அணிகிறேன்; உண்மை!
மெய்யாகத்தான் இதை சொல்கிறேன்;
முகமூடி எதுவும் இல்லாமல்…
நான்;நானாக நானிலத்தில் இருக்கலாகுமோ?
ஓரு ஆங்கில பழமொழி போல்
ஆளுக்கு ஒரு நீதி;
அதுமட்டும் போதாது;
நேரத்திற்கு நேரம் அதுவும் மாறும்;
எதையும் சிறிது கூட்டி,
சிறிது குறைத்து,
சரிவிகிதத்தில் பரிமாறியாக வேண்டும்
சரியான நேரத்தில்,
சரியான மனிதரோடு பகிர்தலை,
நீங்கள்,முகமூடி என்றே கொண்டாலும்…
அதுதான் வாய்மையே.
அது தேவைதான் வாழ்விற்கு..
நானுமே முகமூடியுடன் உலா வருகிறேன்..
என் தோள்பை நிரம்பி வழிகிறது;
முகமூடிகளினால்.
இதோ; இது உங்களுக்கானது.
மகிழ்வுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
30-3-2024