வளவ. துரையன்/நம்பிக்கை

30-3-24-இணையவழிக் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.

வெயிலில் நடந்து வாடும்போதுதான்
நினைவுக்கு வருகிறது
தோட்டத்துச் செடிக்கு நீர்
ஊற்றாதது.

நடும்போதே நான்
சொன்னேன்ல
தெனமும் வந்து தண்ணி ஊத்தணும்னு
அம்மா கத்துவார்.

ஆனால்

நம்பிக்கை இருக்கிறது திட்டித் திட்டி எனக்குச் சோறு போடுவது போல அம்மா
அதற்குத் தண்ணீர் ஊற்றி இருப்பார்

நான் என்னை நம்பியா வைத்தேன்?

என்ன இருந்தாலும்

அம்மா இல்லையா?