வைதேகி/ஒப்பந்தம்

26வது இணையகாலக் கவியரங்கம்


வெயிலின் தாக்கத்தால் வெளியே
தலைகாட்டாது வீட்டில் அடைந்து கிடக்கும்
மனிதர்தம் புலம்பல் நீங்க
வெம்மையைத் தணிக்க வேண்டி
விதம் விதமாய் கிளைகளையும்
இலைகளையும் அசைத்து
காற்றுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நன்முறையில் கையெழுத்தானதாய் கட்டியம்
கூறுகிறது மரம்.


.